சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரிக்கைகளை தீர்த்து வைப்பதை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
03 DEC 2024 3:31PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்ய திட்டத்தின் ( AB PM-JAY ) கீழ், மாநில அரசின் சம்பந்தப்பட்ட அந்தந்த மாநில சுகாதார நிறுவனங்களால் இழப்பீடு கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இழப்பீடு கோரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காண்பது என்பது திட்ட செயல்திறனை அளவிடுவதற்கான முக்கிய அளவுகோல்களில் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரிக்கைகளின் தற்போதைய நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன், அத்தகைய கோரிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் சுகாதார சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் மூன்றடுக்கு குறை தீர்க்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்கள் குறைகளை இணைய அடிப்படையிலான போர்ட்டல் மையப்படுத்தப்பட்ட குறை தீர்க்கும் மேலாண்மை அமைப்பு (சிஜிஆர்எம்எஸ்), மத்திய மற்றும் மாநில அழைப்பு மையங்கள், மின்னஞ்சல், மாநில சுகாதார முகமைகளுக்கு கடிதம் உள்ளிட்ட பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தாக்கல் செய்யலாம். குறைகளின் தன்மையின் அடிப்படையில், மருத்துவமனையுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பயனாளிகளுக்கு ஆதரவு வழங்குதல் உட்பட பல நடவடிக்கைகள் தீர்வுகளாக எடுக்கப்படுகின்றன.
மருத்துவமனைகளின் பங்களிப்பை மேம்படுத்த கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
தேசிய சுகாதார ஆணையம் திருத்தப்பட்ட சுகாதார நலன் தொகுப்பை அதிகரித்த எண்ணிக்கையிலான நடைமுறைகளுடன் (1961) வெளியிட்டுள்ளது. மேலும், 350 தொகுப்புகளுக்கு விலை உயர்த்தப்பட்டு, புதிய தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இழப்பீடு செட்டில்மென்ட் மிக உயர்ந்த மட்டத்தில் கண்காணிக்கப்படுகிறது மற்றும் வரையறுக்கப்பட்ட முடித்துக்கொடுத்தல் நேரத்திற்குள் இழப்பீடு செட்டில் செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
மருத்துவமனைகளின் உண்மையான மற்றும் நேரடி திறன் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவர்களின் கவலையை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்காக மருத்துவமனை சார்ந்த அழைப்பு மையம் (14413) அமைக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் மற்றும் மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு தவறாமல் வருகை தர மாவட்ட அமலாக்க பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.
***
TS/PKV/DL
(रिलीज़ आईडी: 2080354)
आगंतुक पटल : 64