உள்துறை அமைச்சகம்
சிறைச்சாலைச் சீர்திருத்தங்கள்
Posted On:
27 NOV 2024 4:42PM by PIB Chennai
சிறைச்சாலைகளும், அதில் உள்ள கைதிகளும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் அம்சமாகும்.
சிறைகள், கைதிகளின் நிர்வாகம், மேலாண்மை ஆகியவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது பல்வேறு ஆலோசனைகள் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
உள்துறை அமைச்சகம் 2023-ம் ஆண்டில் 'மாதிரி சிறைகள் - சீர்திருத்த சேவைகள் சட்டத்தை' தயாரித்து, அதை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அந்தந்த அதிகார வரம்புகளில் ஏற்றுக்கொள்ள 2023 மே 10 அன்று அனுப்பியுள்ளது. மாதிரி சட்டம், சிறை மேலாண்மை தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான ஆவணமாகும்.
சிறைவாசிகளை சீர்திருத்தவும், மறுவாழ்வு அளித்து, சமுதாயத்தில் ஒருங்கிணைக்கவும் இந்த மாதிரி சட்டத்தில் உரிய வழிவகைகள் உள்ளன. நிறுவன பராமரிப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக, 'சிறைக்கைதிகளுக்கான நலத்திட்டங்கள், மறுவாழ்வு சேவைகள்' ஆகியவற்றிற்கும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் மாதிரி சட்டத்தை பயன்படுத்தவும், அதில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அந்தந்த அதிகார வரம்புகளில் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன .
சிறைச்சாலைகளின் அமைப்பை வலுப்படுத்துதல், சிறைகளில் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டம், தொலைபேசி ஜாமிங் தீர்வுகள், வீடியோ கான்பரன்ஸ் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களின் மூலம் சிறைக் கைதிகளின் நலனுக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நிதி உதவி அளித்து வருகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
------
(Release ID 2077949)
TS/PLM/KPG/KR
(Release ID: 2078248)