ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான தேசிய பிரச்சாரத்தை புது தில்லியில் மத்திய அமைச்சர் திரு  சிவராஜ் சிங் சவுகான் 25 ந்தேதி  தொடங்கிவைக்கிறார்.

Posted On: 23 NOV 2024 12:07PM by PIB Chennai

 

 மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான தேசிய பிரச்சாரமான புதிய உணர்வுமாற்றத்திற்கான முயற்சியின் மூன்றாவது பதிப்பை  நவம்பர் 25ந்தேதி புதுதில்லியில், அகில இந்திய வானொலியின் ரங் பவன் ஆடிட்டோரியத்தில் தொடங்கிவைக்கிறார்மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவியும் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான அரசின் கூட்டு முயற்சியான இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்.

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்  ஏற்பாடு செய்துள்ள ஒரு மாத கால பிரச்சாரம்டிசம்பர் 23 வரை அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும்.

இந்தப் பிரச்சாரமானது "முழு அரசு" அணுகுமுறையின் உணர்வில் ஒரு கூட்டு முயற்சியாகும்பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, உள்துறை அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஆகிய 9 அமைச்சகங்கள்/துறைகள் பங்கேற்கும்.

புதிய உணர்வு பிரச்சாரம் விழிப்புணர்வை பெருக்குவதையும், அடிமட்ட முன்முயற்சிகள் மூலம் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக தகவலறிந்த நடவடிக்கையை இயக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பிரச்சாரம் அதன் தொடக்கத்தில் இருந்து, நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்களைத் திரட்டி, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான குறிப்பிடத்தக்க இயக்கத்தை வளர்த்து வருகிறது. முதல் பதிப்பு 3.5 கோடி மக்களைச் சென்றடைந்தது. பல துறை அமைச்சகங்களால் ஆதரிக்கப்பட்டது,

புதிய உணர்வு 3.0 இன் நோக்கங்கள் பாலின அடிப்படையிலான வன்முறையின் அனைத்து வடிவங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூகங்கள் பேசுவதற்கும் நடவடிக்கை எடுக்கக் கோருவதற்கும் ஊக்குவிப்பது, சரியான நேரத்தில் உதவிக்கான ஆதரவு அமைப்புகளுக்கான அணுகலை வழங்குதல் மற்றும் வன்முறைக்கு எதிராக தீர்க்கமாக செயல்பட உள்ளூர் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவை அடங்கும். பிரச்சாரத்தின் முழக்கம், " வன்முறைக்கு எதிராக, ஒன்றாக, ஒரு குரல், " என்பதாகும். இது, ஒட்டுமொத்த சமூகம் மற்றும் முழு அரசு அணுகுமுறையை ஏற்று, ஒன்றிணைக்கும் முயற்சிகள் மூலம் கூட்டு நடவடிக்கைக்கான அழைப்பை உள்ளடக்கியது.

*****

PKV/KV

 

 

 

 


(Release ID: 2076279) Visitor Counter : 78