அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
27 OCT 2024 3:13PM by PIB Chennai
ஊடகங்களுடனான ஒரு விவாதத்தில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளின் மேம்பாட்டுக்கான அரசின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில் அறிவியல் வளர்ச்சியானது, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
விண்வெளி புத்தொழில்களை ஆதரிப்பதற்காக ரூ. 1,000 கோடி துணிகர மூலதன நிதியைத் தொடங்குவது முதல் உயிரி பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பயோ இ3 கொள்கையை அறிமுகப்படுத்துவது வரை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில் முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த முன்முயற்சிகள் இந்தியாவின் அறிவியல் வலிமையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தொழில்துறையில் நிலையான, சுயசார்பு பொருளாதாரத்திற்கும் பங்களிக்கும் என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் நம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். சந்திரயான் -3 போன்ற சாதனைகளிலிருந்து இந்தியா பெற்றுள்ள உலகளாவிய அங்கீகாரத்தை அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயண முயற்சியான ககன்யான் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
இமயமலையில் உள்ள வளமான உயிரி வளங்கள், 7,500 கிலோமீட்டர் கடற்கரை உள்ளிட்ட நமது இயற்கை வளங்கள், நம்மை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பிராந்தியங்களின் உயிரி தொழில்நுட்ப திறன் மூலம், உள்ளடக்கிய, சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான பொருளாதார வளர்ச்சியை அரசு உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வானிலை இயக்கம் குறித்தும் அவர் பேசினார். விண்வெளி, தகவல் தொழில்நுட்ப அம்சங்களை ஒருங்கிணைக்கும் இந்தப் பணி, இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் நிகழ்நேர வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் என்றார்.
தற்சார்பு, விஞ்ஞான ரீதியாக மேம்பட்ட எதிர்காலம் ஆகியவற்றை நோக்கிய இந்தியாவின் பயணம் ஒவ்வொரு புதிய கொள்கையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். அறிவியல் மூலம் சவால்களைத் தீர்ப்பது, நமது பொருளாதாரத்தை மேம்படுத்துவது, ஒவ்வொரு கண்டுபிடிப்பிலிருந்தும் நமது மக்கள் நேரடியாக பயனடைவதை உறுதி செய்வது ஆகியவை அரசின் முக்கிய நோக்கங்கள் என்று இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
*****
PLM/KV
(रिलीज़ आईडी: 2068673)
आगंतुक पटल : 89