மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான கல்வி உறவுகளை வலுப்படுத்த திரு தர்மேந்திர பிரதான் 7 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்

Posted On: 19 OCT 2024 4:45PM by PIB Chennai

 

கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் 2024 அக்டோபர் 20 முதல் 26 வரை சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். கல்வியில் பரஸ்பர ஆர்வமுள்ள முக்கியப் பகுதிகளில் ஒத்துழைப்பு, பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைப்பை இந்தப் பயணம் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இரண்டு நாள் பயணத்தின் போது, திரு தர்மேந்திர பிரதான் 2024 அக்டோபர் 20 அன்று இந்திய வம்சாவளியினர் உறுப்பினர்களிடையே உரையாற்றுவார்அடுத்த நாள், திரு தர்மேந்திர பிரதான் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங், துணைப் பிரதமர் திரு கான் கிம் யோங், கல்வி அமைச்சர் திரு சான் சுன் சிங், வெளியுறவு அமைச்சர் திரு விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சந்திக்கிறார்ஆசியாவில் முதலிடத்தில் உள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கு திரு தர்மேந்திர பிரதான் செலிறார். அவர் உள்ளூர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு பாடத்திட்ட ஒருங்கிணைப்பின் நோக்கம் குறித்து விவாதிக்க உள்ளார். கல்வியாளர்கள், ஐஐடி மற்றும் ஐஐஎம்களின் முன்னாள் மாணவர்களின் முக்கிய பிரதிநிதிகளை சந்திக்கும் பிரதமர், இரு நாடுகளின் கல்விச் சூழல் தொடர்பான விவாதங்களிலும் ஈடுபடுவார்.

ஆஸ்திரேலியாவுக்கான 3 நாள் பயணத்தின் போது, 2024 அக்டோபர் 23ந்தேதி, அமைச்சர் மெல்போர்னில் கல்வி அமைச்சர் திரு ஜேசன் கிளேரைச் சந்திப்பார்ஆஸ்திரேலிய சர்வதேச கல்வி மாநாட்டில் திரு பிரதான் உரையாற்றுவார். கற்றலுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைகளுக்கு பெயர் பெற்ற தெற்கு மெல்போர்ன் தொடக்கப் பள்ளியை அமைச்சர் பார்வையிடுவார்.

மெட்டெக் முன்மாதிரி மற்றும் உற்பத்திக்கான தனித்துவமான மையமான ஆர்.எம்..டி பல்கலைக்கழகத்தின் 'டிஸ்கவரி டு டிவைஸ்' அவர் பார்வையிடுவார். இந்தப் பயணம் மருத்துவ தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்கான கூட்டு அணுகுமுறைகள் மற்றும் புதுமைகளை முன்னெடுத்துச் செல்வதில் தொழில்துறை-கல்வி இணைப்புகளின் பங்கு ஆகியவற்றை ஆராயும்.

ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் திரு ஜேசன் கிளேருடன் விக்டோரியா பிரீமியர் திரு ஜெசிந்தா ஆலனை அவர் சந்திப்பார். மோனாஷ் பல்கலைக் கழகத்தின் புதுமைப் படைப்பு ஆய்வகம் மற்றும் நானோ கட்டமைப்பு மையத்தையும் பார்வையிடும் அமைச்சர்மெல்போர்னில் தங்கியிருக்கும் போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த கல்வியாளர்களுடனும் கலந்துரையாடுவார்.

ஆரம்பகால குழந்தை பருவ கல்வி பணியாளர்களுக்கு கல்வி கற்பிப்பதில் கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை ஆராய, திரு பிரதான் 24 அக்டோபர் 2024 அன்று சிட்னியில் உள்ள ஆபர்ன் நீண்ட நாள் குழந்தை பராமரிப்பு மையத்திற்குச் செல்வார்புதுமையான ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் அமைச்சர், 2-வது ஆஸ்திரேலியா-இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சிலில் கலந்து கொள்கிறார்.

அக்டோபர் 25 , 2024 அன்று, அவர் கிரான்வில் சவுத் கிரியேட்டிவ் அண்ட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியைப் பார்வையிடுவார். 180 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் தாயகமாகத் திகழும் மேக்குவையர் பார்க் இன்னோவேசன் டிஸ்ட்ரிக்ட்-க்கு ஆவர் செல்வார்.

மாலையில், ஆஸ்திரேலியாவின் அதிக ஆராய்ச்சி தேவைப்படும் பல்கலைக்கழகங்களான ஜிப் ஆஃப் எய்ட் ஏற்பாடு செய்துள்ள இந்திய ஆராய்ச்சி மாணவர்களுடன் திரு பிரதான் கலந்துரையாடுவார்.

கென்சிங்டனில் உள்ள டைரி எனர்ஜி டெக்னாலஜிஸ் கட்டிடத்தில் உள்ள யு.என்.எஸ்.டபிள்யூ எரிசக்தி நிறுவனம் மற்றும் மறுசுழற்சி மற்றும் தூய்மையான எரிசக்திக்கான டிரெயில்பிளேசர் ஆகியவற்றை திரு பிரதான் பார்வையிடுவார். இங்கே, யு.என்.எஸ்.டபிள்யூ எரிசக்தி நிறுவனம் மூலம் வணிக தாக்கத்துடன் நடைமுறை ஆராய்ச்சி பயன்பாடுகளின் நிஜ உலக எடுத்துக்காட்டுகளை அவர் கவனிப்பார், இது உலக முன்னணி ஆராய்ச்சியாளர்களையும் எரிசக்தி துறையையும் ஒன்றிணைக்கிறது.

விளையாட்டு கல்வி மற்றும் விளையாட்டு ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்து ஆராய யுடிஎஸ் மூர் பூங்கா விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வளாகத்திற்கும் அவர் செல்ல உள்ளார். இந்த  வளாகம் ஒரு அதிநவீன கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு வசதி ஆகும்.

*****

PKV/ KV

 

 

 

 



(Release ID: 2066358) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi , Odia