சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் 21-வது திவ்ய கலா மேளாவை நாளை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார்

Posted On: 18 OCT 2024 4:22PM by PIB Chennai

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நாளை 21-வது திவ்ய கலா மேளாவை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

 

இந்த நிகழ்வு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையால், தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் 2024 அக்டோபர் 17 முதல் அக்டோபர் 27 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நாடு முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனாளி கைவினைஞர்களின் திறமை, தொழில்முனைவு, கைவினைத்திறன் ஆகியவற்றின் பிரம்மாண்டமான கொண்டாட்டமாக இருக்கும்.

20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி தொழில்முனைவோர் மற்றும் கைவினைஞர்கள் இந்த 11 நாள் மேளாவில் கூடி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள். இவற்றில் வீட்டு அலங்காரம், கைத்தறி, கைவினைப்பொருட்கள், நகைகள், உணவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் மாற்றுத்திறனாளிகளின் திறமை மற்றும் படைப்பாற்றலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. உள்ளூர் தயாரிப்புகளை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்வு உள்ளூர் முன்முயற்சியை வலியுறுத்தும்.

 

இந்த மேளாவில் மாற்றுத்திறனாளி கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், கலை வெளிப்பாடுகளைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கவும் பிரத்யேக  அரங்குகள் மற்றும் கண்காட்சிகள் இடம்பெறும். இந்த நிகழ்வுகள் அனைத்து 11 நாட்களுக்கும் துடிப்பான சந்தையுடன் இயங்கும்.  ஊனமுற்ற தொழில்முனைவோர் மற்றும் கலைஞர்களின் பல்வேறு திறமைகளைக் காண பார்வையாளர்களை அனுமதிக்கிறது.

 

தொழில்முனைவோருக்கான ஒரு தளமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், திவ்ய கலா மேளா ஒரு வலுவான பக்க நிகழ்வுகளையும் கொண்டிருக்கும்:

 

 

27 அக்டோபர் 2024 அன்று நடைபெறும் 'திவ்ய கலா சக்தி' கலாச்சார நிகழ்ச்சி ஒரு முக்கிய சிறப்பம்சமாகும், இதில் இந்தியா முழுவதிலுமிருந்து மாற்றுத்திறனாளி கலைஞர்களின் வசீகரிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறும். அவர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கும். கூடுதலாக, மேளா பல்வேறு வகையான சுவையான பிராந்திய உணவுகளை வழங்கும், பார்வையாளர்களுக்கு இந்தியாவின் சமையல் பன்முகத்தன்மையை ருசிக்க வாய்ப்பளிக்கும். இது ஒரு வளமான கலாச்சார அனுபவத்தை உருவாக்கும். தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இது திறந்திருக்கும், திவ்ய கலா மேளா – 2024, உள்ளடக்கம், திறமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் உண்மையிலேயே மறக்கமுடியாத கொண்டாட்டமாக அமையும்.

***

PKV/AG/RR/DL


(Release ID: 2066130)
Read this release in: English , Urdu , Hindi