நிதி அமைச்சகம்
சிறப்பு பிரச்சாரம் 4.0 -ன் கீழ் முதல் பாதியில் வருவாய் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2024 3:43PM by PIB Chennai
சிறப்பு பிரச்சாரம் 4.0 இன் ஆயத்த கட்டத்தில் வருவாய்த் துறை பல்வேறு இலக்குகளை நிர்ணயித்துள்ளது. தற்போது, செயலாக்க கட்டத்தில், முக்கிய பிரமுகர்களுக்கான குறிப்புகள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஆய்வு மற்றும் கோப்புகளை களையெடுத்தல் போன்ற அனைத்து முக்கிய பணிகளிலும் நிலுவையில் உள்ளவற்றை அகற்ற அனைத்து முயற்சிகளையும் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சாரம் 2 அக்டோபர் 2024 அன்று தொடங்கி 31 அக்டோபர் 2024 வரை தொடரும்.
பிரச்சாரத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை 100% அடைவதை நோக்கி துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளும் சிறப்பு பிரச்சாரம் 4.0 இல் பங்கேற்றுள்ளனர். பணியிடத்திலும் சுற்றுப்புறத்திலும் தூய்மையை நிறுவனமயமாக்குவதும் இந்த முயற்சியாக உள்ளது.
சிறப்பு முகாம் 4.0 இன் போது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளன. 15.10.2024 வரை இந்த இயக்கத்தின் கீழ் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் 1003 பொதுமக்கள் மனுக்களும், 10 முக்கிய பிரமுகர்களின் மனுக்களும் தீர்வு செய்யப்பட்டுள்ளன. ஏறக்குறைய 333 மின்-கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் 77 கோப்புகள் மதிப்பாய்வுக்குப் பிறகு முடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1061 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 506 கோப்புகள் களையெடுக்கப்பட்டுள்ளன. பழைய பழுதடைந்த மரச்சாமான்கள் / சாதனங்கள், பிற கழிவுகள் / ஸ்கிராப் பொருட்கள் மற்றும் மின்னணு கழிவுகள் அகற்றப்படுவதால் அலுவலக இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துறைக்கு ரூ.1,89,100/- வருவாய் கிடைத்துள்ளது.
காலாவதியானவற்றைத் திறம்பட அகற்றுதல், அலுவலகம் மற்றும் பொது வளாகங்களை தூய்மைப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்த வேகத்தை தொடர வருவாய் துறை உறுதிபூண்டுள்ளது.
***
PKV/KV/KR
(Release ID: 2065753)
(வெளியீட்டு அடையாள எண்: 2065806)
வருகையாளர் எண்ணிக்கை : 103