ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் தலைமையில் சிறப்பு பிரச்சாரம் 4.0-இன் ஆய்வுக் கூட்டம்

Posted On: 17 OCT 2024 10:23AM by PIB Chennai

2024, அக்டோபர் 2 முதல் 31 வரை அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்காகவும், தூய்மையை நிறுவனமயமாக்குவதற்காகவும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் (டி.ஏ.ஆர்.பி.ஜி) சிறப்பு பிரச்சாரம் 4.0 நடைபெறுகிறது. குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, அதன் திட்டப் பிரிவுகள் மற்றும் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் சுகாதார நிறுவனம், நிலுவையில் உள்ள விஷயங்களை அகற்றுவதற்கான சிறப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்கிறது.

 

சிறப்பு பிரச்சாரம் 4.0 ஐ ஆய்வு செய்வது தொடர்பாக 15.10.2024 அன்று பண்டிட் தீன்தயாள் அந்த்யோதயா பவனுக்கு வருகை தந்த டி.ஏ.ஆர்.பி.ஜி செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ், குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை (டி.டி.டபிள்யூ.எஸ்) செயலாளர் திருமதி வினி மகாஜனுடன் பயனுள்ள விவாதத்தை நடத்தினார்.  டி.டி.டபிள்யூ.எஸ்-இன் சிறப்பு நிர்வாக இயக்குநர் திரு அசோக் கே.கே.மீனா மற்றும் இரு துறைகளின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டி.டி.டபிள்யூ.எஸ்-ஆல் பராமரிக்கப்படும் பண்டிட் தீன்தயாள் அந்த்யோதயா பவனில் உள்ள குழந்தைகள் காப்பகத்தையும் டி.ஏ.ஆர்.பி.ஜி செயலாளர் பார்வையிட்டார்.

 

"தூய்மையே சேவை 2024" பிரச்சாரத்தின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, சிறப்பு பிரச்சாரம் 4.0 தொடர்பாக திருமதி வினி மகாஜன் பல மதிப்புமிக்க பரிந்துரைகளை வழங்கினார்.  சிறப்பு பிரச்சாரத்தை மத்திய அரசு அலுவலகங்களுக்கு அப்பால் விரிவுபடுத்துவது; அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் தூய்மைக்கான ஐகாட் (ஒருங்கிணைந்த அரசு இணையவழிப் பயிற்சி தளம்) பிரிவை உருவாக்குதல்; எதிர்காலத்தில் ஓய்வு பெறும் அனைவருக்கும் ஓய்வூதிய தொகுதி; விதிகள் மற்றும் நடைமுறைகளை எளிதாக அணுகும் வகையில் குடிமக்களுக்கு உகந்த நடைமுறைகள்; குழந்தைகள் காப்பக வசதியை அமைத்தல்; துப்புரவுப் பணியாளர்களின் முயற்சிகளை அங்கீகரித்து கௌரவித்து,  அவர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

 

BR/KR

 

***



(Release ID: 2065642) Visitor Counter : 20