பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மலபார் போர்ப்பயிற்சி 2024 தொடங்கியது

Posted On: 09 OCT 2024 6:04PM by PIB Chennai

கிழக்கு கடற்படை கட்டளையின் சார்பில் மலபார் 2024 போர்ப்பயிற்சியின் தொடக்க விழா இன்று (09.10.2024) விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை கப்பல் சத்புராவில் நடைபெற்றது.  2024 அக்டோபர் 08 அன்று தொடங்கிய பன்னாட்டு 28-வது கடல்சார் பயிற்சி, 2024 அக்டோபர் 18 வரை நடைபெறுகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பயிற்சியாக 1992-ல் தொடங்கப்பட்ட மலபார் பயிற்சி, ஒரு குறிப்பிடத்தக்க பயிற்சியாக அமைந்துள்ளது. இதில் ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் பின்னர் இணைந்தன.

கிழக்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் தொகுத்து வழங்கிய இந்த விழாவில், பங்கேற்கும் நாடுகளைச் சேர்ந்த மூத்த கடற்படை, ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கப்பல்கள், விமானங்கள், சிறப்புப் படைகளின் மாலுமிகள், ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்தப் பயிற்சி துறைமுகத்திலும், கடலிலும் இரண்டு தனித்துவமான கட்டங்களாக நடத்தப்படும்.

---

PLM/KPG/DL



(Release ID: 2063632) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi