பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய கடற்படையின் முதல் பயிற்சி படைப்பிரிவு ஈரானின் பண்டர் அப்பாஸுக்கு வருகை

Posted On: 01 OCT 2024 5:42PM by PIB Chennai

பாரசீக வளைகுடாவில் நீண்ட தூர பயிற்சியின் ஒரு பகுதியாக, முதல் பயிற்சி படைப்பிரிவு (1TS) - ஐஎன்எஸ் டிர், ஐஎன்எஸ் ஷார்துல் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் வீரா கப்பல்கள், ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸை வந்தடைந்தன. கடல்சார் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதிலும், பரஸ்பர புரிதலை வளர்ப்பதிலும், இந்தப் பயணம் முக்கிய நடவடிக்கையாகும். ஈரானின் கடற்படை கப்பல் ஜெரே மூலம் கப்பல் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், ஈரான்  கடற்படையின் முதல் கடற்படை மாவட்டம் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளால் கப்பல் நிறுத்துமிடத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது, இந்திய கடற்படை மற்றும் ஈரான்  கடற்படைக்கு இடையே, கடல்சார் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளில் இந்த கப்பல்கள் ஈடுபடும். தொழில்முறை பரிமாற்றங்கள், பயிற்சித் தளங்களை பார்வையிடல், மலர் வளையம் வைத்தல், நட்பு ரீதியான விளையாட்டுப் போட்டிகள்   மற்றும் கடல்சார் கூட்டாண்மை பயிற்சி ஆகியவை கப்பல் தங்கியிருக்கும் நாட்களில் நடத்தப்பட உள்ளன.

முன்னதாக, பயிற்சி கலந்துரையாடலின் ஒரு பகுதியாக. ஈரானிய பயிற்சி புளோட்டிலா கப்பல்களான புஷெர் மற்றும் டோன்ப் ஆகியவை மார்ச் 24 அன்று மும்பைக்கு வருகை தந்தன. பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற்ற மிலன் 24 என்ற பல்தரப்பு கடற்படைப் பயிற்சியிலும், ஈரான்  கடற்படைக் கப்பல் தேனா பங்கேற்றது. சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) தொலைநோக்குக்கு ஏற்ப, பிராந்திய நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

---

MM/KPG/DL



(Release ID: 2060863) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi