நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2024-25 நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 5.85% அதிகரித்துள்ளது

Posted On: 01 OCT 2024 5:49PM by PIB Chennai

2024 செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தியில், நிலக்கரி அமைச்சகம்  கணிசமான அளவுக்கு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 68.94 மில்லியன் டன் உற்பத்தியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இருந்த 67.26 மில்லியன் டன் உற்பத்தியை விட 2.49% அதிகமாகும். இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. கூடுதலாக, ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி (2024 செப்டம்பர்  வரை) நிதியாண்டு 24-25-ல் 453.01 மில்லியன் டன்னை (தற்காலிகமானது) எட்டியுள்ளது. நிதியாண்டு '23-24-ன் இதே காலகட்டத்தில் 427.97 மில்லியன் டன் என்ற அளவுடன் ஒப்பிடும்போது, இது 5.85% வளர்ச்சி ஆகும்.

கூடுதலாக, நிலக்கரி அனுப்புதலும் செப்டம்பர் 2024 இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. 23-24 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 70.31 மில்லியன் டன் என்ற அளவுடன் ஒப்பிடும்போது 73.37 மில்லியன் டன்னை எட்டியது. இது 4.35% வளர்ச்சி ஆகும். ஒட்டுமொத்த நிலக்கரி அனுப்புதல் (2024 செப்டம்பர்  வரை) நிதியாண்டு 24-25-ல் 487.87 மில்லியன் டன் (தற்காலிகமானது) ஆக இருந்தது, இது நிதியாண்டு '23-24 இல் இதே காலகட்டத்தில் 462.27 மில்லியன் டன்னாக இருந்தது. இது 5.54% வளர்ச்சி ஆகும்.

மேலும், நிலக்கரி கையிருப்பும் ஓரளவு அதிகரித்துள்ளது. 2024  செப்டம்பர் 29-ம் தேதி நிலவரப்படி மொத்த நிலக்கரி கையிருப்பு 33.46 மில்லியன் டன்னாக இருந்தது. 2023 செப்டம்பர் 29  நிலவரப்படி 22.15 மில்லியன் டன் இருப்பு இருந்தது. இது 51.07% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்துவதையும், நாட்டின் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய அனுப்புவதை மேம்படுத்துவதையும் தொடர்ந்து செய்து வருகிறது. உற்பத்தி மற்றும் அனுப்புதல் ஆகிய இரண்டிலும் மேல்நோக்கிய வளர்ச்சி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், நிலக்கரி விநியோகத்தில் தன்னிறைவை அடைய உதவுகிறது.

***

PKV/AG/DL



(Release ID: 2060785) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi