வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நகர்ப்புற வறுமை ஒழிப்பு குறித்த பயிலரங்கு

Posted On: 24 SEP 2024 5:52PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், நகர்ப்புற வறுமை ஒழிப்பு குறித்த பயிலரங்கை 2024 செப்டம்பர் 23 அன்று ஏற்பாடு செய்திருந்தது.  நகர்ப்புறங்களில் வறுமையின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இவற்றுக்கு தீர்வு காண மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் இந்தப் பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.

இந்தப் பயிலரங்கில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக செயலாளர் திரு ஸ்ரீனிவாஸ் கதிகிதலா முக்கிய உரை நிகழ்த்தினார். இந்தப் பயிலரங்கில் நகராட்சி ஆணையர்கள், தெரிவு செய்யப்பட்ட 25 நகரங்களின் பிரதிநிதிகள், மாநில மிஷன் இயக்குநர்கள், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நகர்மயமாதல் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகின்றன என்றும், இவற்றை புதுமையான சிந்தனை மூலம், பயன்படுத்துவது அவசியம் என்றும் கூறிய திரு ஸ்ரீனிவாஸ் கதிகிதலா, இதன் மூலம் நகர்ப்புற ஏழைகளுக்கு இளைஞர்கள் உட்பட குறிப்பாக பாதிக்கப்படும் பிரிவினருக்கு சிறந்த வாழ்வாதார வசதிகளை கிடைக்கச் செய்ய முடியும் என்றார்.

இந்தப் பயிலரங்கை அடுத்து 2024 அக்டோபர் 1 முதல் முன்னோடித் திட்டம் ஒன்று 3 மாதங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்னதாக ஒரு மாத காலத்திற்கு தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். கட்டுமானத் தொழிலாளர்கள், செயலி தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட  முறைசாரா தொழிலாளர்களில் பாதிக்கப்படும் பிரிவினரை முன்னேற்றும் வகையில் இந்த முன்னோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிதியுதவி, சமூக பாதுகாப்பு வழங்குதல், குறுந்தொழில்கள் செய்வதற்கு கடன் கிடைக்கச் செய்தல் போன்றவற்றின் மூலம் வறுமையை ஒழிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058299  

***

SMB/RS/DL



(Release ID: 2058368) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi