திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியின் கீழ் திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஒரே நாளில் 11,778 மரக்கன்றுகளை நட்டுள்ளது

Posted On: 20 SEP 2024 6:51PM by PIB Chennai

தூய்மையே சேவை இயக்கத்துடன் இணைந்த தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியின் கீழ், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. 
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தில் நாடு முழுவதும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்கள் உற்சாகமாக பங்கேற்றுள்ளன. ஒரே நாளில் 11,778 மரங்கள் நடப்பட்டுள்ளன.
பிரதமரின் திறன் மையங்கள், தொழில்முனைவோர் மற்றும் சிறுவணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனங்கள், இந்திய தொழில்முனைவோர் நிறுவனம், தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ஐ.டி.ஐ), தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் போன்றவை மரம் நடும் நடவடிக்கைகளில் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை தீவிரமாக ஈடுபடுத்துகின்றன. 
அமைச்சகத்தின் சார்பில் நாடு தழுவிய தூய்மை இயக்கங்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பொது ஈடுபாடுகள் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057137

**************


PLM/RS/KV



(Release ID: 2057188) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi