விவசாயத்துறை அமைச்சகம்

பிரேசிலின் குயாபாவில் நடைபெற்ற ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு

Posted On: 14 SEP 2024 11:47AM by PIB Chennai

செப்டம்பர் 12 முதல் 14  வரை பிரேசிலின் குயாபாவில் நடைபெறும்  ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் பிரேசிலுக்கான இந்திய தூதர் திரு சுரேஷ் ரெட்டி மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர்  ஆகியோர் பங்கேற்றனர் .

ராம்நாத் தாக்கூர் தனது உரையில், நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா விவசாய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது. எங்கள் அணுகுமுறை உற்பத்தித்திறனில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, விவசாயிகளின் நலனை மேம்படுத்துதல் மற்றும் வளர்ச்சிக்கான விரிவான பார்வையை உள்ளடக்கியது. உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக உலகின் மிகப்பெரிய உணவு அடிப்படையிலான பாதுகாப்பு நிகர திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

நிலையான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக நெகிழ்திறன் கொண்ட விவசாய முறைகளை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். வளரும் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சிறப்பு மற்றும் வேறுபட்ட அணுகுமுறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள சிறு மற்றும் குறு மீனவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், உலகளாவிய வர்த்தக விவாதங்களில் திறம்பட பங்கேற்க உதவுவதிலும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

உலகளாவிய விவசாயத்திற்கான நான்கு முக்கிய முன்னுரிமை பகுதிகள் குறித்த விவாதங்களை மையமாகக் கொண்ட கூட்டத்தில் பின்வரும் அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. முதலாவது, விவசாயம் மற்றும் உணவு முறைகளின் நிலைத்தன்மை; இரண்டாவதாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் சர்வதேச வர்த்தகத்தின் பங்களிப்பை மேம்படுத்துதல்; மூன்றாவதாக, நிலையான, நெகிழ்திறன் மற்றும் உள்ளடக்கிய விவசாயம் மற்றும் உணவு முறைகளில் குடும்ப விவசாயிகள், சிறு உரிமையாளர்கள், பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் அத்தியாவசிய பங்கை உயர்த்துதல்; நான்காவதாக, உள்ளூர் மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் நிலையான மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பை ஒருங்கிணைப்பதை ஊக்குவித்தல்.

அமைச்சர்கள் மட்டத்திலான அமர்வுகளுடன் கூடுதலாக , திரு ராம்நாத் தாக்கூர் மற்ற நாடுகளுடன் இந்தியாவின் வேளாண் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இருதரப்பு கூட்டங்களை நடத்தினார். உலகளாவிய உணவு முறைகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை எதிர்கொள்ள தேவையான கூட்டு உலகளாவிய முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவும், கற்றுக்கொள்ளவும், பங்களிக்கவும் இந்தியா தயாராக இருப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஜி20 அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பை வென்றதற்கும், இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ் தொடங்கப்பட்ட முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் பிரேசிலுக்கு திரு ராம்நாத் தாக்கூர் வாழ்த்து தெரிவித்தார். தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு   அவர் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்..

*****

PKV/ KV

 

 

 



(Release ID: 2054876) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi