நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 3.0-ல் நிலக்கரி அமைச்சகம் முதலிடம் வகிக்கிறது

Posted On: 12 SEP 2024 6:15PM by PIB Chennai

தூய்மை மற்றும் நிலுவைப் கணிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை, சிறப்பு இயக்கம் 4.0 தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2023, அக்டோபர் 2, முதல் 2024, ஆகஸ்ட் 31, வரை நடைபெற்ற சிறப்பு இயக்கம் 3.0, தூய்மை, கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புக்கு உயர் முன்னுரிமை ளித்துள்ளது. நிலக்கரி அமைச்சகத்தின் கீழ், இந்த இயக்கம் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட கள அலுவலகங்களில் குறிப்பிடத்தக்க முடிவுகளை அளித்தது. மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இடத்தை தூய்மைப்படுத்துதல் பிரிவின் கீழ் நிலக்கரி அமைச்சகம் முதலிடம் பிடித்துள்ளது.

 

சிறப்பு இயக்கம் 3.0 (2 அக்டோபர் 2023 - 31 அக்டோபர் 2023), அமைச்சகம் 65,88,878 சதுர அடிக்கும் அதிகமான பரந்த பகுதியை தூய்மை செய்தது. 8424 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ரூ. 34 கோடி வருவாய் ஈட்டியது.

 

சிறப்பு இயக்கம் 3.0 மூலம் ஈட்டப்பட்ட வருவாயில் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளில் நிலக்கரி அமைச்சகம் நான்காவது இடத்திலும் உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054249

 

***

IR/RS/DL



(Release ID: 2054322) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi , Telugu