தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்தல் குறித்து மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுடன் பெங்களூருவில் விவாதிக்கவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2024 2:34PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் செல்வி ஷோபா கரண்ட்லஜே தலைமையில் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் 30.08.2024 அன்று பெங்களூருவில் தொழிலாளர் சீர்திருத்தங்கள், கட்டிட தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள், இஎஸ்ஐசி, இ-ஷ்ரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து விவாதிக்கும் வகையில் மண்டல கூட்டம் நடைபெற உள்ளது.
தொழிலாளர் விதிகளின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் உருவாக்கப்பட்ட விதிகளில் தளர்வு, சமூக பாதுகாப்பு பலன்களை எளிதாக அணுகுவதற்கான ஒரே தீர்வாக இ-ஷ்ரம் போர்ட்டலைப் பயன்படுத்துதல், கட்டிட தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல், வேலை வாய்ப்புகளுக்காக கல்வி நிறுவனங்களுடன் இணைப்பு மற்றும் வேலைவாய்ப்பை அளவிடுவது குறித்து கூட்டத்தின் போது விவாதிக்கப்படும்.
***
(Release ID: 2049702)
IR/RS/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2049735)
வருகையாளர் எண்ணிக்கை : 105