சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மரங்கள் பூமித்தாயின் ஆபரணங்கள்: சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
28 AUG 2024 6:23PM by PIB Chennai
மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் புதுதில்லியில் உள்ள ஜெய்சால்மர் மாளிகையில் நீதித்துறையின் சார்பில் மரக்கன்று நடும் முகாம் நடைபெற்றது. இந்த முயற்சி "அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று நடுவோம்" என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
ஜெய்சால்மர் இல்ல அலுவலக வளாகத்தில் ஒரு மரக்கன்றை நட்ட பின்னர் பேசிய அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால், பசுமையான சுற்றுச்சூழலை பராமரிப்பது மனிதகுலத்திற்கு அவசியம் என்றார். இயற்கை, சுற்றுச்சூழலை பராமரிப்பது, நமது அன்றாட நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மரங்கள் பூமிக்கு அவசியமான ஆபரணங்களாகத் திகழ்கின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அதாவது 2024 ஜூன் 5 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி "அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று நடுவோம்" என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, 2024 செப்டம்பருக்குள் நாடு முழுவதும் சுமார் 80 கோடி மரக்கன்றுகளும், மார்ச் மாதத்திற்குள் சுமார் 140 கோடி மரக்கன்றுகளும் நடப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
***
PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2049502)
आगंतुक पटल : 55