பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடலோரக் காவல்படை கப்பல் சுஜய் இரண்டு நாள் பயணமாக இந்தோனேசியா சென்றது

Posted On: 21 AUG 2024 5:44PM by PIB Chennai

இந்திய கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் சுஜய், ஒரு ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன்  , ஆகஸ்ட் 21, 2024 அன்று, கிழக்கு ஆசியாவில் நடந்து வரும் வெளிநாட்டு பணியின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இரண்டு நாள் பயணமாக துறைமுகத்திற்கு வருகை தந்தது. முதல் முயற்சியாக, கப்பலில்  உள்ள இரண்டு பெண் ஐ.சி.ஜி அதிகாரிகள் 'கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் பெண்களை' பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.    இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் அவர்கள் கலந்துரையாடி  பங்கேற்பார்கள். 

இந்தப் பயணத்தின்போது, கடலோர காவல்படை சுஜய் குழுவினர் கடல் மாசுபாடு தணிப்பு, கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மற்றும் கடல்சார் சட்ட அமலாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தொழில்முறை கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள். இந்த நடவடிக்கைகளில்  Badan Keamanan Laut Republik Indonesia (BAKMALA) உடனான தொழில்முறை தொடர்புகளும் அடங்கும், அதாவது,     இந்தோனேசியா கடலோர காவல்படை, பயிற்சி, கூட்டு யோகா அமர்வுகள், நட்பு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பகாம்லாவுடன் பாசேஜ் கடல் பயிற்சி ஆகியவை இதில் இடம் பெறும்.

கூடுதலாக, ஐ.சி.ஜி.எஸ் சுஜய் கப்பலில் உள்ள 10 என்.சி.சி கேடட்கள் உள்ளூர் இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைப்பயணத்தில் பங்கேற்பார்கள்.    

ஐ.சி.ஜி, ஜூலை 06, 2020 அன்று, மேம்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் அதன் ஈடுபாடுகளை நிறுவனமயமாக்குவதற்காக பகாம்லாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்  கீழ் இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான ஐ.சி.ஜி.யின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப வெளிநாடுகளில் படைகளை அனுப்புவது உள்ளது. சமகால கடல்சார் சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், பிராந்தியத்தில் கடல்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு  முக்கியமான முக்கிய கடல்சார் முகமைகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

***

PKV/AG/DL



(Release ID: 2047382) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP