சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"மகிழ்ச்சி - மனித மதிப்புகள் மூலம் திறன் வளர்த்தல்" என்ற தலைப்பில் ஊக்கஉரை, பயிலரங்கம்: மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பு

Posted On: 21 AUG 2024 5:35PM by PIB Chennai

சட்டம், நீதி அமைச்சகம், சட்ட வரைவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து "மனித மதிப்புகள் மூலம் திறன் வளர்த்தல்-மகிழ்ச்சி" என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் விரிவுரை மற்றும் பயிலரங்குக்கு இன்று ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், பங்கேற்றார். பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும், அதற்கான தீர்வுகளைக் கண்டறிவதும் ஒரு ஆரோக்கியமான நடைமுறையாகும் என்றும், இதை பணிச் சூழலில் கற்பிக்க முடியும் என்றும்  அவர் கூறினார். இந்தச் சூழலில், தனது அனுபவத்திலிருந்து உதாரணங்களையும், எடுத்துக்காட்டுகளையும் அளித்த அவர், நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான மந்திரம், ஒருவரின் வாழ்க்கையில் மன அழுத்தத்தை சமாளிப்பதே என்று கூறினார்.

 

பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆக்கப்பூர்வமான தீர்வுகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல், வேலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அவசியம் என்று திரு மேக்வால் கூறினார்.

 

விரிவுரை மற்றும் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்வதன் நோக்கத்தை சட்டத் துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி எடுத்துரைத்தார்.

இந்த பயிலரங்கில், எழுத்தாளரும் ஊக்கமூட்டும் பேச்சாளருமான டாக்டர் நந்திதேஷ் நிலே நான்கு முக்கிய அம்சங்களில் தனது கருத்துகளை விரிவாக பேசினார்.

 

இந்த தலைப்பில் பேசிய அவர், மகிழ்ச்சியின் கிரியா ஊக்கியை தனக்குள்ளிருந்தே கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின், மூத்த  அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047349

---------------

PLM/RS/DL


(Release ID: 2047381)
Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP