அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் சந்திப்பு

Posted On: 20 AUG 2024 6:55PM by PIB Chennai

கடற்படைத் தளபதியாக சமீபத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்ட அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, இன்று நார்த் பிளாக்கில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, இந்தியாவின் முதல் மனித விண்வெளி திட்டமான 'ககன்யான்' மற்றும் பெருங்கடல் பணி "சமுத்திரயான்" ஆகியவற்றுக்கு கடற்படையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

முக்கியமான தேசியத் திட்டங்களில், இந்திய கடற்படை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் (இஸ்ரோ) இடையேயான ஆழமான ஒத்துழைப்பை இந்த சந்திப்பு எடுத்துக்காட்டுகிறது.

இந்த சந்திப்பின் போது, டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் முதல் மனித விண்வெளி திட்டமான "ககன்யான்" ல் செல்லும் குழுவினர் பத்திரமாக திரும்புவதற்கான முன்னணி அமைப்பாக இந்திய கடற்படை திகழும் என்றார். அக்டோபர் 23 அன்று திட்டத்தின் 1-வது மேம்பாட்டு இயக்கத்தின் (டிவி-டி 1) போது இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047 என்ற தொலைநோக்கை அடைய பல்வேறு துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான முழு அரசு அணுகுமுறை வெற்றி பெற்றிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை இணையமைச்சர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், "2025-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஒரு இந்தியரையும், ஆழ்கடலில் மற்றொரு இந்தியரையும் உலகம் காணும்" என்று உறுதிபடக் கூறினார். இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் திறன்களை மேம்படுத்துவதற்காக தனது அமைச்சகத்தின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியான ஆழ்கடல் பணி "இந்தியப் பெருங்கடலின் பாதுகாவலர்கள்" உடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் இந்திய கடற்படை இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தேசிய நலன்களை மேம்படுத்துவது மட்டுமின்றி, மனித குலத்திற்கும் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களில் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நினைவு கூர்ந்தார். தனியார் துறை பங்களிப்பால் உந்தப்பட்ட விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு எவ்வாறு சான்றாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீதான ஏஞ்சல் வரி நீக்கப்பட்டிருப்பதையும் பாராட்டிய பிரதமர், புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்முனைவோரையும் ஊக்குவிப்பதில் இது ஒரு முக்கிய நடவடிக்கை என்று கருதினார்.

தொழில்நுட்ப அடிப்படையிலான புத்தொழில் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை ஆராயுமாறு டாக்டர் ஜிதேந்திர சிங்,  அட்மிரல் திரிபாதியை ஊக்குவித்தார். பாதுகாப்புத் துறையில் உள்ள பல துறைகள் ஏற்கனவே இதுபோன்ற ஒத்துழைப்புகளால் பயனடைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து அறிவிக்கப்பட்ட ககன்யான் மற்றும் ஆழ்கடல் பயணங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை அவர் பாராட்டினார். இவை இரண்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வேகத்தைப் பெற்றுள்ளன. விரைவில் இந்த முக்கியமான பகுதிகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை வெளிப்படுத்த உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047037

***

MM/AG/DL



(Release ID: 2047063) Visitor Counter : 35


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP