தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் மன்சுக் மாண்டவியா இபிஎஃப்ஓ ஆன்லைன் தொகுதியை அறிமுகப்படுத்தினார்

प्रविष्टि तिथि: 13 AUG 2024 7:14PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் இன்று 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து விலக்கு பெறுவதை ஒப்படைப்பதற்கான ஆன்லைன் வசதியை' தொடங்கி வைத்தார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தாவ்ரா, மத்திய பிஎஃப் ஆணையர் திருமதி நீலம் ஷாமி ராவ் மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அறிமுகத்தின் போது பேசிய டாக்டர் மாண்டவியா, முன்கூட்டியே செயல்படுத்தப்பட்ட EPFO மத்திய தகவல் தொழில்நுட்ப அமைப்பு 2.01 இன் கீழ் உள்ள ஆறு தொகுதிகளில் ஆன்லைன் வசதி முதன்மையானது என்று குறிப்பிட்டார். இந்த வசதி  நேரத்தையும் முயற்சியையும்  குறைக்கும், அதே நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்,  விண்ணப்பங்களை  சரிபார்த்தல், இந்த வசதி 70 நிறுவனங்களைச் சேர்ந்த குறைந்தது 1 லட்சம் உறுப்பினர்களுக்கு பயனளிக்கும், அவர்கள் சரண்டர் செய்ததை ஒப்புக் கொண்டவுடன், கிட்டத்தட்ட ரூ.1000 கோடியை மாற்ற முடியும் என்று மத்திய அமைச்சர் மேலும் கூறினார்.

தற்போதைய பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண EPFO பல முயற்சிகளை எடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். உடனடி எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு முன்முயற்சிகளின் முதல் படிகள் இவை என்று அவர் மேலும் கூறினார். எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் தற்போதைய பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணுமாறு மத்திய அமைச்சர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

---

PKV/KPG/KV


(रिलीज़ आईडी: 2045268) आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP