எஃகுத்துறை அமைச்சகம்

ஊரகப்பகுதிகளில் எஃகு உற்பத்தியும் முதலீடும்

Posted On: 09 AUG 2024 3:53PM by PIB Chennai

2023-24-ம் ஆண்டிலும் நான்கு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2019-20 ஆண்டிலும்  கச்சா எஃகு உற்பத்தி குறித்த தரவு கீழே தரப்பட்டுள்ளது:

 

ஆண்டு

கச்சா எஃகு உற்பத்தி (மில்லியன் டன்களில்)

2019-20

109.14

2023-24

144.30

    

ஆதாரம்: கூட்டுத் தொழிற்சாலைக் குழு   

எஃகு கட்டுப்பாடு நீக்கப்பட்ட ஒரு துறையாகும். எஃகுத் துறையின் வளர்ச்சிக்கு உகந்த கொள்கைச் சூழலை உருவாக்குவதன் மூலம் அரசு வசதி செய்து தரும் அமைப்பாக செயல்படுகிறது.  சந்தை செயல்பாடு, மூலப்பொருட்களுக்கான போக்குவரத்து, பிற வணிக நோக்கங்களின் அடிப்படையில் எஃகு ஆலைகள் எஃகு நிறுவனங்களால் அமைக்கப்படுகின்றன.

இந்திய எஃகு ஆணையம், தேசிய இஸ்பத் நிகாம் லிமிடெட்  ஆகிய எஃகு பொதுத்துறை நிறுவனங்கள் கிராமப்புற டீலர்களை நியமித்துள்ளன. எஃகு பயன்பாட்டின் நன்மைகள் குறித்து கிராமப்புற மக்களுக்கு  கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு விளம்பர நடவடிக்கைகளிலும் அவை ஈடுபட்டுள்ளன.

எஃகு உற்பத்திக்குத் தேவையான இரும்புத் தாது சுரங்க நடவடிக்கைகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ளன. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புக்கான முக்கிய ஆதாரமாகவும்  உள்ளன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

****

SMB/DL



(Release ID: 2043848) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi