குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
கயிறு உற்பத்தி
Posted On:
08 AUG 2024 5:05PM by PIB Chennai
உள்நாட்டு சந்தையில் கயிறு மற்றும் கயிறு பொருட்களின் விற்பனையை மேம்படுத்துவதற்காக, கயிறு வாரியம் நாட்டில் 29 விற்பனை நிலையங்களையும், 01 பிரத்யேக கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தையும் நிறுவியுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உட்பட, அனைத்துப்பிரிவு கைவினைஞர்களின் கயிறு பொருட்கள், கயிறு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கயிறு வாரியம், தனது விற்பனை நிலையங்களை தேவைக்கேற்ப, காலமுறைப்படி புதுப்பித்து வருகிறது. இந்தூர், நவி மும்பை, லக்னோ, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில், புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. ஜம்மு, ஜெய்ப்பூர், அகமதாபாத், மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
தென்னை நார் பொருட்களின் விற்பனை பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மட்டுமே சென்றடைகிறது. சிறு நகரங்கள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் நடைபெறும் கண்காட்சிகளில் வாரியம், பங்கேற்று, கயிறு மற்றும் கயிறு பொருட்களை நுகர்வோருக்கு எளிதில் கிடைக்கச் செய்து வருகிறது. வாரியத்தின் விற்பனை மையங்களில் அதிக விற்பனை வாய்ப்பு இருப்பதால், பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.
கயிறு வாரியம், நாடு முழுவதும் 29 விற்பனை நிலையங்களையும், 11 பிரத்யேக கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையங்களையும் நிறுவியுள்ளதுடன், நாடு முழுவதும் கயிறு தயாரிப்புகளை பிரபலப்படுத்தவும், அவை கிடைப்பதை உறுதி செய்யவும், நடவடிக்கை எடுத்துள்ளது:
பல்வேறு கயிறு பொருட்களுக்கு தொடர் விளம்பர முகாம்கள் நடத்துதல்.
இளம் கயிறுக் கைவினைஞர்கள் மற்றும் பெண்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்.
தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்றல் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
உள்நாட்டு சந்தையில், கயிறு மற்றும் கயிறு பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனையில் கணிசமான பாய்ச்சலை அடையவும், கயிறு வாரியம் ஒரு விற்பனை உத்தியை வகுத்துள்ளது. கயிறு வாரியம், கொள்முதல் உத்தி, மொத்த விற்பனை மற்றும் பண்டிகை காலங்களில் தள்ளுபடி உத்தி, விற்பனையை அதிகரிக்க வணிக மேம்பாட்டு ஆலோசகர்களை நியமித்தல், உள்ளூர் கேபிள் நெட்வொர்க் மூலம் விளம்பரம், பண்பலை மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரம் போன்ற, பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
MM/AG/DL
(Release ID: 2043371)