ஜல்சக்தி அமைச்சகம்

பனிப்பாறை ஏரி வெடிப்பின் தாக்கம்

Posted On: 08 AUG 2024 1:12PM by PIB Chennai

அக்டோபர், 2023 இல் டீஸ்டா-III நீர்மின் அணை உடைந்ததைத் தொடர்ந்து, மத்திய நீர்வள ஆணையம் (CWC) பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தால் (GLOFs) பாதிக்கப்படக்கூடிய தற்போதுள்ள மற்றும் கட்டுமானத்தில் உள்ள அனைத்து அணைகளின் வடிவமைப்பை வெள்ளத்தை மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பனிப்பாறை ஏரிகளைக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள அனைத்து புதிய அணைகளிலும் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

மத்திய நீர்வள ஆணையம், ஒவ்வொரு ஆண்டும் ஜுன் முதல் அக்டோபர் வரை 902 பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை (50 ஹெக்டேர் முதல் 50 ஹெக்டேர் வரையிலான நீர்ப்பரப்பு கொண்ட 477 பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் மற்றும் 10 ஹெக்டேர் முதல் 50 ஹெக்டேர் வரையிலான நீர்ப்பரப்பு கொண்ட 425 பனிப்பாறை ஏரிகள் உட்பட) கண்காணித்து வருகிறது. இது பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் நீர் பரவல் பரப்பில் ஒப்பீட்டு மாற்றத்தைக் கண்டறியவும், அத்துடன் கண்காணிப்பு மாதத்தில் கணிசமாக விரிவடைந்துள்ள ஏரிகளை பேரிடர் கண்ணோட்டத்தில் அடையாளம் காணவும் உதவுகிறது. மாதாந்திர கண்காணிப்பு அறிக்கைகளை https://cwc.gov.in/glacial-lakeswater-bodies-himalayan-region

 என்ற மின்னஞ்சல் முகவரியில் அணுக முடியும்.

ஆறு இமாலய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் இதர பங்குதாரர்களை உள்ளடக்கிய தேசிய பேரிடர் அபாய குறைப்பு ஆணையத்தின் கீழ் பேரிடர் அபாய குறைப்பு குழு ஒன்று அதிக அபாயம் உள்ள பனிப்பாறை ஏரிகளின் தொகுப்பை அடையாளம் கண்டுள்ளது. இந்த ஏரிகளை நேரடியாக மதிப்பீடு செய்வதற்கும், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு/பிற கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு சாராத நடவடிக்கைகளை அமைப்பது தொடர்பான விரிவான தணிப்பு உத்திகளை தயாரிப்பதற்கும் பயணங்களை அனுப்புகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான உயர்நிலைக் குழு, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களுக்கு, அபாயக் குறைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

என்.டி.எஸ்.ஏ தொகுத்த தகவல்களின்படி, 47 அணைகள் (38 அணைகள்  பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 9 அணைகள் கட்டுமானத்தில் உள்ள) மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மின்சார ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை இந்திய பிரதேசத்தில் உள்ள பனிப்பாறை ஏரிகளிலிருந்து, பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தால் (ஜி.எல்.ஓ.எஃப்) பாதிக்கப்படக்கூடும். 31 திட்டங்களுக்கான ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

புவி அறிவியல் அமைச்சகம் அதன் தன்னாட்சி நிறுவனமான துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (என்.சி.பி.ஓ.ஆர்) மூலம், 2013 முதல் சந்திரா படுகையில் உள்ள இரண்டு பனிப்பாறைகளுக்கு ஆதரவான ஏரிகளை கண்காணித்து அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இமயமலை ஆய்வுகளுக்கான தேசிய மிஷன் (என்.எம்.எச்.எஸ்) நிதியுதவியுடன் 'கிழக்கு இமயமலையின் டீஸ்டா நதி படுகையில் பனி மற்றும் பனிப்பாறை பங்களிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம்' என்ற தலைப்பில், சிக்கிம் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் நிலை, ரூர்க்கியில் உள்ள தேசிய நீரியல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷண் சவுத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2042990)

MM/AG/KR



(Release ID: 2043097) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP