கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்தியாவின் துறைமுகம் மற்றும் கடல்சார் துறை: அரசின் சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் திட்டங்கள்

Posted On: 02 AUG 2024 6:33PM by PIB Chennai

நாட்டில் துறைமுக மேம்பாடு மற்றும் கடல்சார் உள்கட்டமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட தொடர் கேள்விகளுக்கு மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து   மற்றும் நீர்வழிகள்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதிகரித்து வரும் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த பல்வேறு கவலைகளுக்கு பதிலளித்த அமைச்சர். சாலை மற்றும் ரயில் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து அதன் செலவு திறன் மற்றும் குறைந்த மாசுபாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக கருதப்படுகிறது என்று எடுத்துரைத்தார்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ், ஆந்திராவில் 13 திட்டங்களுக்கு சுமார் ரூ.2,500 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் ரோ-பாக்ஸ் மற்றும் பயணிகள் படகுத்துறைகள், மீன்பிடி துறைமுகங்கள், துறைமுக நவீனமயமாக்கல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை அடங்கும். இந்த தொகையில், ரூ.450 கோடி வளர்ச்சிப் பணிகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கடலோர கப்பல் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ், கடலோர கப்பல் நிறுத்துமிடங்கள் மற்றும் ரோ-ரோ/ரோ-பாக்ஸ் படகுத்துறைகளை அமைப்பதற்காக ரூ.849 கோடி மதிப்பிலான 15 சாகர்மாலா திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ரயில்வே அமைச்சகம் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பதன் மூலம் கடலோர கப்பல் போக்குவரத்துக்கான சரக்கு மானியங்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும், துறைமுகங்களுக்கான முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துவதற்கும் அரசு  வசதி செய்து வருகிறது.

துறைமுக மேம்பாட்டில் உள்ள சவால்களை சுட்டிக்காட்டிய அமைச்சர், குறிப்பிடத்தக்க நிதி கிடைப்பது, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், திறன் தடைகள், சரக்குப் போக்குவரத்து மற்றும் இணைப்பில் திறமையின்மை போன்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டினார். இந்த பிரச்சினைகளை சமாளிக்க, துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், துறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கலை மேம்படுத்தவும் சாகர்மாலா திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளி துறைமுக கொள்கலன் முனையத் திட்டத்தின் நிலை குறித்து திரு சர்பானந்த சோனோவால் தனது எழுத்துப்பூர்வ பதிலில் விவரித்தார். பொது-தனியார் கூட்டாண்மையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தினார். முனையத்தின் வளர்ச்சிக்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 7,056 கோடியாகும், இதில் திட்டத்தின் நிதி நம்பகத்தன்மையை ஆதரிப்பதற்காக நம்பகத்தன்மை இடைவெளி நிதிக்காக நியமிக்கப்பட்ட ரூ. 1,950 கோடியும் அடங்கும். இந்த முயற்சி துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் திறன் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2040911

*****

RB/DL



(Release ID: 2041096) Visitor Counter : 39


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP