பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அழுத்தமூட்ட இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பை நிறுவுதல்

Posted On: 01 AUG 2024 1:50PM by PIB Chennai

அழுத்தமூட்ட இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைப்பது, நகர எரிவாயு விநியோக (CGD) வலையமைப்பின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் (PNGRB) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால், அவர்களின் குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின்படி (MWP) இது மேற்கொள்ளப்படுகிறது. 12/12A CGD ஏலச் சுற்று முடிந்த பிறகு, PNGRB 307 புவியியல் பகுதிகளில் (GAs) CGD கட்டமைப்பை உருவாக்க அங்கீகாரம் அளித்துள்ளது, இது 34 மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில், சுமார் 733 மாவட்டங்களில் பரவியுள்ள நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 100% ஐ உள்ளடக்கியது, 2032-க்குள் நாடு முழுவதும் 18,336 CNG நிலையங்களை நிறுவுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சி.என்.ஜி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, சி.என்.ஜி (போக்குவரத்து) மற்றும் பி.என்.ஜி (உள்நாட்டு) பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மின்சாரம் மற்றும் பிற முன்னுரிமை அல்லாத துறைகளிலிருந்து உள்நாட்டு எரிவாயுவைத் திருப்புவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. உள்நாட்டு இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டில் சிஎன்ஜி (டி)  பிஎன்ஜி (டி) துறைகளை முதல் முன்னுரிமையாக அறிவித்தல்; ஏல நடைமுறையின் கீழ் விகிதாச்சார அடிப்படையில் எரிவாயுவை விநியோகிக்க வேண்டிய எந்தவொரு சூழ்நிலையிலும் உயர் அழுத்த உயர் வெப்பநிலை (HP-HT) எரிவாயுவை வழங்குவதற்கு சிஎன்ஜி (டி)  பிஎன்ஜி (டி) துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு. சுரேஷ் கோபி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

---

MM/KPG/DL


(Release ID: 2040358)
Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP