இந்திய போட்டிகள் ஆணையம்
விட்டெரா நிறுவனத்தின் 100% பங்கு மூலதனத்தை பஞ்ச் நிறுவனம் கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2024 6:44PM by PIB Chennai
விட்டெரா நிறுவனத்தின் 100% பங்கு மூலதனத்தை பஞ்ச் நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் (CCI) ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்த பங்கு கையகப்படுத்தல், விட்டெராவின் வழங்கப்பட்ட, நிலுவையில் உள்ள பங்கு மூலதனத்தின் 100%-ஐ பஞ்ச் குளோபல் எஸ்ஏ கையகப்படுத்துவது தொடர்பானதாகும்.
உலகளவில், எண்ணெய் வித்து உணவுகள், காய்கறி எண்ணெய்களின் விற்பனையில் பஞ்ச் (Bunge) முக்கிய இடத்தில் உள்ளது.
விட்டெரா (Viterra) பதப்படுத்தப்படாத பொருள், குறிப்பாக தானியங்களை வாங்குதல் விற்பனை செய்வதில் கவனம் செலுத்துகிறது.
இந்த பங்கு மூலதன கையகப்படுத்துதலில் சிசிஐ-யின் விரிவான உத்தரவு பின்பற்றப்படும்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 2039392)
வருகையாளர் எண்ணிக்கை : 83