பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு ஊழியர்களின் கற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டம்

Posted On: 24 JUL 2024 6:17PM by PIB Chennai

நாட்டின் வளர்ச்சிக்கான விருப்பங்கள் மற்றும் தேசிய முன்னுரிமை திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அதிகாரிகளின் முக்கிய பங்களிப்பை அங்கீகரித்துள்ள அரசு, அவர்களின் திறன் மேம்பாட்டுக்காக மிஷன் கர்மயோகி என்ற தேசிய அளவிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது இந்த தகவலை தெரிவித்த அமைச்சர்,  "கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த ஒரு அரசு ஊழியரும் வெளிநாட்டில் பொதுக் கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தைப் படிக்கவோ அல்லது பயிற்சி பெறவோ பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நிதியுதவி செய்யவில்லை" என்றார். மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்களது ஊழியர்களுக்கான திறனை வளர்ப்பதற்கான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக ஒருங்கிணைந்த ஆன்லைன் பயிற்சி தளமான iGOT ஐ அரசாங்கம் தொடங்கியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை எளிதாக்கவும் தொடர்ச்சியான கற்றல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஐஐஎம் போன்ற இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மை குறித்து அரசு ஊழியர்களுக்கு நீண்ட மற்றும் குறுகிய கால படிப்புகளை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

*****


VK/DL



(Release ID: 2037723) Visitor Counter : 38


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP