திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் திறன் இந்தியா டிஜிட்டல்
Posted On:
22 JUL 2024 3:36PM by PIB Chennai
திறன் இந்தியா இயக்கத்தின் கீழ், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் , தேசிய தொழிற்பழகுநர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கைவினைஞர் பயிற்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ், திறன் மேம்பாட்டு மையங்கள் / நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அரசு வழங்குகிறது. இந்திய இளைஞர்கள் எதிர்காலத்திற்குத் தயாராவதையும், தொழில்துறைக்கு ஏற்ற திறன்களை வளர்த்துக் கொள்வதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயிற்சித் திட்டங்களை சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைக்கவும், பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்புத் தகுதியை மேம்படுத்தவும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் துறை அமைச்சகத்தின் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பயிற்சித் திட்டங்கள், சந்தையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்படுகின்றன. தொழில்துறை 4.0, ட்ரோன், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் துறைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0-ன் கீழ் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பெரு நிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) முன்முயற்சிகளின் கீழ் மாநில மற்றும் பிராந்திய மட்டங்களில் உள்ள நிறுவனங்களுக்கு தொழில் இணைப்புகளை உறுதி செய்வதற்காக ஐ.பி.எம், சிஸ்கோ, ஃபியூச்சர் ஸ்கில் ரைட்ஸ் நெட்வொர்க் , அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பயிற்சி இயக்குனரகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட பத்து நாடுகளுடன் இந்திய அரசு குடிபெயர்தல் மற்றும் நகர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், தைவான், ஆஸ்திரியா, மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் தேவைக்கேற்ப திறன் பயிற்சியை ஒருங்கிணைத்துள்ளது. வெளிநாடுகளில் திறமையான தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 30 திறன் இந்தியா சர்வதேச மையங்களை அமைக்கும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
திறன் இந்தியா டிஜிட்டல் மையம் அதன் டிஜிட்டல் கற்றல் கூட்டாளர்களால் வழங்கப்படும் பிக் டேட்டா, மெஷின் லேர்னிங் மற்றும் அனலிட்டிக்ஸ் போன்றவற்றில் எதிர்கால படிப்புகளை வழங்குவதன் மூலம் தொழில்துறை 4.0 க்கு இந்திய பணியாளர்களை தயார்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜெயந்த் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2034983)
PKV/BR/KR
(Release ID: 2036186)