நிதி அமைச்சகம்

டேக்ஸ்நெட் 2.0 திட்டத்தை பார்தி-ஏர்டெல் நிறுவனத்துக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கியது

Posted On: 19 JUL 2024 7:17PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி),  டேக்ஸ்நெட் 2.0 திட்டத்தை பார்தி-ஏர்டெல் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. வருமான வரித் துறைக்கு நெட்வொர்க் இணைப்பு, வசதி மேலாண்மை சேவைகள், காணொலி சேவைகளை வழங்குவதற்கான  ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும் இது. இது பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தடையற்ற இணைப்பு சேவைகளை வழங்குகிறது. மேலும், தற்போதைய டேக்ஸ்நெட் 1.0 திட்டத்தை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இத்துறையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்த இது பெரிதும் உதவும்.

வருமான வரித் துறையின் நெட்வொர்க் அமைப்பை மறுசீரமைப்பது, மேம்பட்ட பாதுகாப்பு, மேம்பட்ட நம்பகத்தன்மை, அனைத்து பங்குதாரர்களுக்கும் தடையற்ற பயனர் அனுபவத்தை வழங்குவதை டேக்ஸ்நெட் 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் நிபுணத்துவம், புதுமையான தீர்வுகளுக்காக புகழ்பெற்ற  பார்தி-ஏர்டெல் நிறுவனம் திறந்த டெண்டர் தேர்வு செயல்முறை மூலம் இந்த முக்கியமான திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான தரவைப் பாதுகாக்கவும் தனியுரிமையை உறுதிப்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மேம்பட்ட பாதுகாப்பு, நாடு முழுவதும் உள்ள துறை பயனர்களுக்கு நிலையான, நம்பகமான சேவையை வழங்குவது ஆகியவை டேக்ஸ்நெட் 2.0 திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். 

 அதிக நம்பகத்தன்மை, துறை பயனர்களுக்கு மென்மையான, தடையற்ற அணுகலை உறுதி செய்வதன் மூலம் மக்கள் மற்றும் வணிகங்களுக்கான வரி சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவையும் இதில்  அடங்கும்.

டேக்ஸ்நெட் 2.0 கருத்திட்டத்தின் அமுலாக்கம் டிஜிட்டல் உள்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு உயர்தர சேவைகளை வழங்குவதற்கும் அரசின் அர்ப்பணிப்பை மேலும் முன்னெடுக்கும் வகையில் வருமான வரித்துறைக்கு  ஒரு வலுவான வலையமைப்பு இணைப்பு தளத்தை வழங்கும்.

****

PKV/DL



(Release ID: 2034576) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi