ஊரக வளர்ச்சி அமைச்சகம்

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மூங்கில் சாகுபடி

Posted On: 19 JUL 2024 3:06PM by PIB Chennai

மூங்கில் சாகுபடி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்கும் அதே வேளையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்று ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் கூறியுள்ளார்.

தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அறக்கட்டளையுடன் இணைந்து, மூங்கில் விவசாயத்தின் மூலம் நிலையான கிராமப்புற வாழ்வாதாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 'மூங்கில் குறித்த தேசிய கருத்தரங்கை' நேற்று நடத்தியது.

 

இந்தக் கருத்தரங்கு மூங்கில் சாகுபடி குறித்த இந்தியாவின் முதல் விரிவான கையேட்டை அறிமுகப்படுத்தியது. இது ஏழு பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது. இது சிறு நில உரிமையாளர்களான பெண் விவசாயிகளுக்கு அத்தியாவசிய அறிவை ஊட்டுகிறது.

 

இந்தக் கருத்தரங்கில் பேசிய கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங், கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன், நீடித்த பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டிற்கு இந்தத் திட்டம் ஒரு சான்றாகும் என்று கூறினார்.

 

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அறக்கட்டளையுடன் செயல் திட்ட இயக்குநர் அலெக்ஸாண்ட்ரியா ஹூர்டா ஆகியோர் யுஜிஏஓ செயலியை அறிமுகப்படுத்தினர். இது பெண் சிறு விவசாயிகளுக்கு நிகழ்நேர தரவு ஆதரவை வழங்கும் டிஜிட்டல் கருவியாகும்.

 

வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு கணிசமாக பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, பல்வேறு தொழில்களில் நிலையான மாற்றாக மூங்கிலின் திறனை கருத்தரங்கு வலியுறுத்தியது.

 

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் 10 லட்சம் கிராமப்புற பெண்களுக்கு மூங்கில் விவசாயத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ .100,000 க்கு மேல் சம்பாதிக்க வகை செய்கிறது. இது இந்தியா முழுவதும் பொருளாதார சுதந்திரம் மற்றும் நிலையான வளர்ச்சியை இயக்குகிறது.

 

***

(Release ID: 2034324)
PKV/RR/KR



(Release ID: 2034350) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi , Manipuri