பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

1140 குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகள் குடும்ப ஓய்வூதியம் குறை தீர்க்கும் சிறப்பு முகாமின் 2-வது வாரத்தில் தீர்க்கப்பட்டுள்ளன

Posted On: 12 JUL 2024 5:22PM by PIB Chennai

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறையின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, குடும்ப ஓய்வூதிய குறைகளை தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரத்தை பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 1 ஜூலை 2024 அன்று தொடங்கினார்.

ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம், இரண்டாவது வார இறுதியில், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. மொத்தமுள்ள 1891 குடும்ப ஓய்வூதிய வழக்குகளில், 1,140 குடும்ப ஓய்வூதிய வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

46 அமைச்சகங்கள்/துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பயனளித்துள்ளன. சில முக்கியமான நேர்வுகளில், குடும்ப ஓய்வூதிய குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPENGRAMS) மூலம் குடும்ப ஓய்வூதிய குறைகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032773

****

LKS/RS/DL



(Release ID: 2032871) Visitor Counter : 43


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP