நிதி அமைச்சகம்

நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி தலைமையில் தனியார் துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது

Posted On: 09 JUL 2024 7:48PM by PIB Chennai

நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி தலைமையில் புதுதில்லியில் தனியார் துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அரசின் பல்வேறு நிதிச் சேவைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இத்திட்டங்களில் தனியார் துறை வங்கிகளின் பங்களிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மூலம் நாட்டில் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதிலும், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் விவேக் ஜோஷி கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவை திட்டங்களை செயல்படுத்த தனியார் துறை வங்கிகள் தங்களது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தனியார் வங்கிகள் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள பிரிவினருக்கு சேவை செய்வதற்கும் அவர்களின் வங்கித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் வலியுறுத்தினார்.

***

(Release ID: 2031883)

PKV/PLM/AG/KR



(Release ID: 2032064) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP