பாதுகாப்பு அமைச்சகம்

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளின் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய துணைப்பிரதமருடன் பாதுகாப்பு அமைச்சர் தொலைபேசி உரையாடலை நடத்தினார்

Posted On: 04 JUL 2024 1:18PM by PIB Chennai

ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லெசுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (04.07.2024) தொலைபேசி உரையாடல் நடத்தினார். இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தியதுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த விஷயங்கள் பற்றியும் உரையாடியதாக பாதுகாப்பு அமைச்சர் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான ராணுவக் கூட்டாண்மையில் நாம் மகத்தான மதிப்பு வைத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.

2023, நவம்பரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இருவரும்,  ராணுவக் கூட்டாண்மையில் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து உரையாடினார்கள். 2024-ல் வெளியிடப்பட்ட தங்களின் தேசியப் பாதுகாப்பு உத்திகள் குறித்த ஆவணத்தில் உயர்நிலைப் பாதுகாப்பு பங்குதாரராக இந்தியாவை ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு ராஜ்நாத் சிங்கிற்கு திரு ரிச்சர்ட் மார்லெஸ் வாழ்த்து தெரிவித்தார். டி-20 உலக சாம்பியனாக இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதற்கும், பாதுகாப்பு அமைச்சருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

----

Release ID: 2030645)

SMB/KPG/RR



(Release ID: 2030711) Visitor Counter : 17