பாதுகாப்பு அமைச்சகம்
யுஹெச் - 3ஹெச் ஹெலிகாப்டருக்கு பிரியாவிடை கொடுத்தது இந்தியக் கடற்படை
Posted On:
28 JUN 2024 9:56PM by PIB Chennai
2024 ஜூன் 28 அன்று விசாகப்பட்டினம், ஐஎன்எஸ் தேகாவில் நடைபெற்ற விழாவில் இந்தியக் கடற்படையின் யுஹெச் -3 ஹெச் ஹெலிகாப்டருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனா தலைமை வகித்தார். மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று அந்த ஹெலிகாப்டரின் சிறந்த சேவைகளை நினைவு கூர்ந்தனர். யுஹெச் -3 ஹெச் ஹெலிகாப்டருக்கு பதில் இனி சீ கிங் 42 சி என்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும்.
2007-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட யுஹெச் -3 ஹெச் ஹெலிகாப்டர் விசாகப்பட்டினத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்தப் பல்துறை ஹெலிகாப்டர் மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கை போன்றவற்றில் முக்கியப் பங்கு வகித்தது.
இதன் சேவை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இது விசாகப்பட்டினத்தில் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்படும்.
****
SMB/PLM/KV
(Release ID: 2029550)
Visitor Counter : 25