அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நோய்க்கிருமியை உருவாக்கும் உயிரி மருத்துவக் கழிவுகளை மண்ணில் மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றும் முன்னோடித் திட்டம் மற்றும் ஆய்வை சிஎஸ்ஐஆர் மற்றும் எய்ம்ஸ் நிறுவவுள்ளது
Posted On:
25 JUN 2024 6:26PM by PIB Chennai
நோய்க்கிருமியை உருவாக்கும் உயிரி மருத்துவக் கழிவுகளை மண்ணில் மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றும் முன்னோடித் திட்டம் மற்றும் ஆய்வை சிஎஸ்ஐஆர் மற்றும் எய்ம்ஸ் நிறுவவுள்ளது.
புதுதில்லியில் “ஒருவாரம் ஒரு மையப்பொருள்” என்ற இயக்கத்தைத் தொடங்கிவைத்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.
24 தொழில்நுட்ப பரிமாற்றங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் ஆகியவற்றுக்கான நிகழ்வுக்கு சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் துணைத் தலைவருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார். 2023-ம் ஆண்டு சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் அனைத்து பரிசோதனைக் கூடங்களிலும் நடத்தப்பட்ட “ஒரு வாரம் ஒரு பரிசோதனைக் கூடம்” என்ற இயக்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2024, ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை “ஒருவாரம் ஒரு மையப்பொருள்” என்ற இயக்கத்தைத் தொடங்க டாக்டர் ஜிதேந்திர சிங் யோசனை தெரிவித்தார். தொழில்நுட்பத் திட்டங்கள், நவீன உள்நாட்டுமயமான பொருட்கள், பரிசோதனைக் கூடங்களின் நடைமுறைகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் செயல்பாடுகள் இந்த ஒருவார கால இயக்கத்தின் மையப்பொருளாக இருக்கும்.
***
PKV/SMB/RS/KV
(Release ID: 2028812)