பாதுகாப்பு அமைச்சகம்

சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்து உருவாக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 25 JUN 2024 12:37PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை முன்முயற்சியான பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்புகள் (ஐடெக்ஸ்), புதுதில்லியில் 350வது ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. எலக்ட்ரோ-ஆப்டிகல், அகச்சிவப்பு, செயற்கை துளை ரேடார் மற்றும் 150 கிலோ வரை ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் பேலோடுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட சிறிய வகை  செயற்கைக்கோள்களை வடிவமைத்து உருவாக்குவதற்காக ஸ்பேஸ் பிக்சல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 150வது ஐடெக்ஸ் ஒப்பந்தம் 2022 டிசம்பர் மாதத்தில் கையெழுத்திடப்பட்டது, மேலும் 18 மாத காலத்திற்குள், 350வது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கூடுதல் செயலாளர் (பாதுகாப்பு உற்பத்தி) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு அனுராக் பாஜ்பாய், ஸ்பேஸ் பிக்சல் டெக்னாலஜிஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு அவைஸ் அகமது நதீம் அல்தூரி இடையே பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமனே, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. விரிவான பூமி கண்காணிப்பு தரவை வழங்க உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள்களை உருவாக்கி ஏவுவதில் ஸ்பேஸ்பிக்செல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

 

இந்த 350 வது ஐடெக்ஸ் ஒப்பந்தம் விண்வெளி மின்னணுவியலில் புதுமைகளை செயல்படுத்துகிறது, இதில் முன்பு அர்ப்பணிக்கப்பட்ட பெரிய செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்பட்ட பல பேலோடுகள் இப்போது சிறிய அளவில் செய்யப்படுகின்றன. இந்த சிறிய செயற்கைக்கோள் தேவைக்கேற்ப பல சிறிய பேலோடுகளை ஒருங்கிணைத்து, விரைவான மற்றும் சிக்கனமான வரிசைப்படுத்தல், எளிதான உற்பத்தி, அளவிடுதல், தகவமைப்பு மற்றும் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கம் போன்ற நன்மைகளை வழங்கும்.

பாதுகாப்புத்துறை செயலாளர் தமது உரையில், தொழில்நுட்பத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் தேசத்தைப் பாதுகாப்பதற்கும் புதிய பாதுகாப்பு கண்டுபிடிப்பாளர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பாராட்டினார். புதுமைப் படைப்புகளுடன் உள்நாட்டுமயமாக்கலை இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உள்நாட்டு திறன்கள் பரிசோதனை மற்றும் மேம்பாட்டுக்கான தளத்தை வழங்குவதன் மூலம் புதுமையை வளர்ப்பதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன என்று கூறினார். உள்நாட்டில் தயாரிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் புதுமை உள்நாட்டுமயமாக்கலைத் தூண்டுகிறது என்று கூறிய அவர், ஒவ்வொரு அடியிலும் புதுமையாளர்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் அரசு அளிக்கும் என உறுதியளித்தார்.

2021 ஆம் ஆண்டில் புதுமைப் பிரிவில் பொதுக் கொள்கைக்கான மதிப்புமிக்க பிரதமர் விருதைப் பெற்ற ஐடெக்ஸ், பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028447

***

ANU/PLM/PKV/KV/RR

(Release ID: 2028447)



(Release ID: 2028452) Visitor Counter : 40