பாதுகாப்பு அமைச்சகம்
ஹிண்டன் விமானப்படை தளத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்புத் திருவிழா, மறு பணியமர்த்துதல் தலைமை இயக்ககத்தால் 2024, ஜூன் 21 அன்று நடத்தப்பட உள்ளது
Posted On:
20 JUN 2024 12:34PM by PIB Chennai
முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்புத் திருவிழா, மறு பணியமர்த்துதல் தலைமை இயக்ககத்தால், உத்திரப் பிரதேச மாநிலம், ஹிண்டன் (காசியபாத்) விமானப்படை தளத்தில் உள்ள நிலைய கலையரங்கில் 2024, ஜூன் 21 அன்று நடத்தப்பட உள்ளது. முன்னாள் படை வீரர்களுக்கு 2-வது முறையாக வேலைவாய்ப்பு வழங்க ஏதுவாக, முன்னாள் படை வீரர்களுக்கும், வேலை வழங்குவோருக்கும் இடையே, இணைப்பை ஏற்படுத்துவதே இந்த வேலைவாய்ப்பு திருவிழாவின் நோக்கமாகும். நாடு முழுவதும் முப்படைகளிலும் பணியாற்றிய முன்னாள் படைவீரர்கள், இந்த வேலைவாய்ப்புத் திருவிழாவில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.
சுமார் 40 பெரும் தொழில் நிறுவனங்கள், களப்பணி, நிர்வாகப்பணி, எழுத்துப்பணி, நிறுவனப் பாதுகாப்பு மற்றும் அதுசார்ந்த பணிகளில் முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளன.
இதில் பங்கேற்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் காலை 7 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் சமீபத்திய கல்வித்தகுதி அல்லது சுய விவரக் குறிப்பின் ஐந்து நகல்களுடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்து வரவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு வாரண்ட் ஆபீசர் எஸ் கே சிங்கை 9311720898 என்ற எண்ணிலும், ஜூனியர் வாரண்ட் ஆபீசர் மொகந்தாவை 7030595754 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் வேலை வழங்கும் நிறுவனங்கள்/ வேலை வழங்குவோரும் www.dgrindia.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது அரங்குகளை பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2026905
***
AD/MM/RS/RR
(Release ID: 2027027)