பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

10 வது சர்வதேச யோகா தின முன்னோட்டமாக தேசிய பாதுகாப்பு அகாடமி யோகா பயிலரங்கை ஏற்பாடு செய்தது

प्रविष्टि तिथि: 14 JUN 2024 8:10PM by PIB Chennai

10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தேசிய பாதுகாப்பு அகாடமி ஜூன் 14, 2024 அன்று புனேயின் கடக்வாஸ்லாவில் ஒரு பயிலரங்குக்கு ஏற்பாடு செய்தது. இந்தப் பயிலரங்கில் முப்படைகளின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

பயிலரங்கின் ஒரு பகுதியாக, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில் யோகாவின் முக்கியத்துவம்  எடுத்துரைக்கப்பட்டது. பயிலரங்கில்  பிராணாயாமம், ஆசனங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்றன. இந்திய ஆயுதப் படைகளிலிருந்து பயிற்சி பெற்ற யோகா பயிற்றுனர்கள் சரியான தோரணைகள் மற்றும் சுவாச நுட்பங்களை நிரூபித்தனர். யோகாவின் நன்மைகள் குறித்தும் அவர்கள் விரிவாக விளக்கினர்.

யோகாவை ஊக்குவிப்பதன் மூலமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முழுமையான நல்வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி தேசிய பாதுகாப்பு அகாடமி உணர்த்தியது. இந்தப் பயிலரங்கு கலந்து கொண்ட அனைவரிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

***


AD/PKV/DL


(रिलीज़ आईडी: 2025530) आगंतुक पटल : 83
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu