பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரு ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்

Posted On: 10 JUN 2024 8:54PM by PIB Chennai

2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை வெற்றிகரமாகப் பொறுப்பு வகித்த திரு ராஜ்நாத் சிங்கிற்குப் பாதுகாப்புத் துறையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமரின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவர் ஒதுக்கியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதி உறுப்பினரான திரு ராஜ்நாத் சிங், 2019 ஜூன் 1 அன்று, முதல் முறையாகப் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.

திரு ராஜ்நாத் சிங் 1951 ஜூலை 10, அன்று உத்தரப் பிரதேசத்தின் சந்தோலி மாவட்டத்தில் பிறந்தார். கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்று ஆசிரியராகப்  பணியாற்றினார். 1977 - 1980 மற்றும் 2001 - 2003-ம் ஆண்டுகளில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1991-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச அரசில் கல்வி அமைச்சராக இருந்தார். 1999-ம் ஆண்டு  முதல் 2000-ம் ஆண்டு வரை மத்திய அமைச்சரவையில் சாலைப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார்.

பின்னர் 2000 – 2002 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தார். 2003-ம் ஆண்டில், மத்திய அமைச்சரவையில் வேளாண் அமைச்சராகப் பணியாற்றினார். 1994-1999 மற்றும் 2003-2008-ம் ஆண்டுகளில் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ம் ஆண்டில் அவர் 15 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மே 27 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் திரு ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2019, 2024-ம் ஆண்டில், அவர் ராஞ்சி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

***

(Release ID: 2023846)

SMB/IR/AG/RR


(Release ID: 2024010)
Read this release in: English , Urdu , Hindi , Telugu