மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காற்றின் தரக்கண்காணிப்பு முறை, ஏர் ப்ரவாஹ் செயலி ஆகியவை தொடங்கிவைக்கப்பட்டன
Posted On:
05 JUN 2024 6:49PM by PIB Chennai
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காற்றின் தரக்கண்காணிப்பு முறை, ஏர் ப்ரவாஹ் செயலி ஆகியவற்றை இன்று புதுதில்லியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இவை இந்த அமைச்சகத்தின் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு கிருஷ்ணன், இந்த தரக்கண்காணிப்புக் கருவி, மிகவும் குறைந்த செலவிலானது. தொழிற்சாலைகளில் தேவையைப் பொறுத்து 3 விதங்களில் கிடைக்கும் என்று கூறினார். இந்தக் கருவி முழுமையாக பரிசோதிக்கப்பட்டு காற்றின் பல்வேறு நிலைகளை ஆய்வு செய்யத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏர் ப்ரவாஹ் என்னும் செல்பேசி செயலி நிகழ்நேர காற்றின் தரக்குறியீட்டைக் கண்காணிப்பதாகும். இது ஆன்ட்ராய்டு ப்ளே ஸ்டோர்களில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022923
-----
AD/SMB/KPG/DL
(Release ID: 2022940)