பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐ.சி.ஜியின் மாசு கட்டுப்பாட்டு கப்பல் சமுத்ரா பஹேர்தார் ஆசியான் நாடுகளுக்கு அதன் வெளிநாட்டு வரிசைப்படுத்தலின் ஒரு பகுதியாக வியட்நாமில் ஒரு துறைமுக அழைப்பை மேற்கொள்கிறது

प्रविष्टि तिथि: 02 APR 2024 2:46PM by PIB Chennai

இந்திய கடலோர காவல்படையின் (ஐ.சி.ஜி) மாசு கட்டுப்பாட்டு கப்பல் சமுத்ரா பஹேர்தார், ஒரு ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு (ஆசியான்) நடந்து வரும் வெளிநாட்டு பணி நிமித்தத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 02, 2024 அன்று வியட்நாமின் ஹோ சி மின் துறைமுகத்தை அடைந்தது. கப்பலின் மூன்று நாள் பயணத்தின் போது, கடல் மாசுபாடு தணிப்பை மையமாகக் கொண்ட  தொழில்முறை குழுவினர் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு, கடல்சார் சட்ட அமலாக்கம் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இந்த நடவடிக்கைகளில் பல்வேறு பயிற்சிகளில் கப்பல் ஊழியர்கள் ஈடுபடுவதுடன், வியட்நாம் கடலோர காவல்படையுடன்  வழித்தடப் பயிற்சியையும் மேற்கொள்வார்கள்.  

இந்தப் பயணம் இந்திய கடலோரக் காவல்படை மற்றும் வியட்நாம் கடலோர காவல்படை இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் திறன்களையும் வெளிப்படுத்துகிறது. மேலும், கப்பலில்  உள்ள 25 தேசிய மாணவர் படை (என்.சி.சி) கேடட்கள் நடைபயிற்சி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள்.

2015-ம் ஆண்டு முதல், இந்திய கடலோர காவல்படை,வியட்நாம் கடலோர காவல்படை ஆகியவை ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் நட்பு நாடுகளுடன் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்திய கடலோர காவல்படை உறுதிபூண்டுள்ளது. இந்தக் கப்பலின் பயணம் அதனை உறுதிசெய்துள்ளது.

2022-ம் ஆண்டில் கம்போடியாவில் நடந்த ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்ட கடல் மாசுபாட்டிற்கான இந்தியா ஆசியான் முன்முயற்சியின் தொடர்ச்சியாக இந்த நாடுகளுக்கு ஐ.சி.ஜி சிறப்பு கப்பல் பயணம் மேற்கொள்கிறது.  ஆசியான் பிராந்தியத்திற்கு சமுத்ரா பஹேர்தாரை  அனுப்புவது, கடல் மாசுபாடு குறித்த இந்தியாவின் பகிரப்பட்ட கவலை மற்றும் தீர்மானத்தை பிரதிபலிக்கிறது.

***

SRI/PKV/AG/KV


(रिलीज़ आईडी: 2016924) आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी