சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

பிகானேரில் நாளை நடைபெறுகிறது, ‘நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ பிரச்சார நிகழ்ச்சி

Posted On: 08 MAR 2024 9:55AM by PIB Chennai

இந்தியா குடியரசாக மாறியதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில்  நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்பிரச்சார நிகழ்ச்சி  நாளை நடைபெறுகிறது. முன்னதாகஜனவரி 24, 2024 அன்று, புதுதில்லியில் நீதித்துறை ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது, இந்த நிகழ்வின் போது குடியரசுத் துணைத் தலைவர், ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு மற்றும் அவர்களின் சட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்என்ற தலைப்பில் ஒரு வருட கால பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.  இதன் கீழ்  பிராந்திய / மாநில அளவிலான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள மகாராஜா கங்கா சிங் பல்கலைக்கழகத்திலும் நாளை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக  மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு டி.ஒய்.சந்திரசூட், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் ராஜஸ்தான் சட்ட அமைச்சர் திரு. ஜோகரம் படேல் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகள் மீதான நமது கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதையும், நமது நாட்டைப் பிணைக்கும் பகிரப்பட்ட நன்னெறிகளைக் கொண்டாடுவதையும் இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. நமது ஜனநாயகப் பயணத்தில் குடிமக்கள் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடவும், அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கவும்  இது ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்தியாவில் உள்ள 500 முன்னேற விரும்பும்  வட்டாரங்களில் "நீதி உதவி" என்ற திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படும். முன்னேற விரும்பும் வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களில் வீடுவீடாகச் சென்று சட்ட சேவைகள் மற்றும் தீர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சமுதாயம் சார்ந்த தூதுவர்களாக இவர்கள் செயல்படுகின்றனர். வட்டார அளவிலான அலுவலரின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் பயனாளிகளின் வழக்குகளைப் பதிவு செய்தல், வழக்கு முன் ஆலோசனை பெறுதல் அல்லது வழக்கு பிரதிநிதித்துவம் கோருதல், சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட அறிவு ஆகியவற்றை கிராமம் அல்லது வட்டார அளவில் நடத்துதல் போன்ற சட்டச் சேவைகளை வீடுவீடாகச் சென்று வழங்குவதை உறுதி செய்வதற்கு நீதி உதவி பொறுப்பாகும்.

***

PKV/BR/KV



(Release ID: 2012689) Visitor Counter : 65


Read this release in: English , Urdu , Hindi , Telugu