நிதி அமைச்சகம்

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

Posted On: 01 MAR 2024 6:19PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று புதுதில்லியில் இருந்து ரூ.1,000 கோடி மதிப்பிலான ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களை மெய்நிகர் வடிவில் தொடங்கி வைத்தார்.

இந்தத் தொடக்க விழாவில் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலாளர் திரு சஞ்சய் மல்ஹோத்ராநிதிச் சேவைகள் துறைச் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷிமத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர்  திரு நிதின் குப்தாமறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமதி நிர்மலா சீதாராமன்திட்டங்கள் தாமதமின்றி முடிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம் என்றும்கட்டுமானப் பணிகள் உரிய காலத்தில் தொடங்கப்படுவதையும்கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்கள் முடிக்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுபோன்ற திட்டங்கள் அதிகாரிகளின் நம்பிக்கையையும், மனஉறுதியையும் அதிகரிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் கூறினா

அமிர்த காலப்பகுதியில் தேசத்தைக் கட்டமைக்க அதிகாரிகள் தங்கள் கடமைகளை விடாமுயற்சியுடன் ஆற்ற வேண்டும் என்று திருமதி சீதாராமன் மேலும் அறிவுறுத்தினார்.

***

PKV/RS/KRS



(Release ID: 2010752) Visitor Counter : 51


Read this release in: English , Urdu , Hindi