பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணம் முதன்மைத் திட்டங்களின் பரவலாக்கலை நோக்கமாகக் கொண்டது

Posted On: 08 FEB 2024 2:03PM by PIB Chennai

சுகாதார வசதிகள்அத்தியாவசிய நிதிச் சேவைகள்சமையல் எரிவாயு இணைப்புகள் பெறுதல்ஏழைகளுக்கு வீட்டுவசதிஉணவுப் பாதுகாப்புமுறையான ஊட்டச்சத்துநம்பகமான சுகாதாரம்தூய்மையான குடிநீர்தரமான கல்வி போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும்இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மற்றும் தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் தேவையான சேவைகளை அணுகச் செய்வதற்கும் தனது முன்னோடித் திட்டங்களைப் பரவலாக்கும் இயக்கத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்களிப்புடன் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நோக்கத்துடன், "வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணம்" என்ற பெயரில் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில்ஜல் சக்தி அபியான் மற்றும் முன்னேற விரும்பும்  மாவட்டங்கள் திட்டத்திற்கான நோடல் அதிகாரிகள் ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டனர். அதேபோல்இந்தப் பயணத்தை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் திறம்பட ஒருங்கிணைக்க மாநிலங்கள் / மாவட்டங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)ம், பிரதமர் அலுவலகம்பணியாளர் நலன்பொதுமக்கள் குறைதீர்ப்புஓய்வூதியம்அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2003904)

ANU/SMB/KRS



(Release ID: 2004169) Visitor Counter : 55