ரெயில்வே அமைச்சகம்
2015க்குப்பின் சுமார் 23,000 வழக்கமான ரயில் பெட்டிகள் எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
02 FEB 2024 4:55PM by PIB Chennai
2015-ம் ஆண்டு முதல் ரயில்களில், வழக்கமான (ஐ.சி.எஃப்) ரயில் பெட்டிகளுக்கு பதிலாக எல்.எச்.பி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. 2015 முதல் இதுவரை சுமார் 23,000 வழக்கமான பெட்டிகள் எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.
சிறந்த ஓட்டுநர் தரக் குறியீடு, மேம்பட்டப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விபத்துகளின் போது ரயில் பெட்டிகள் கவிழ்வதைத் தடுக்கவும், சேதத்தைக் குறைக்கவும் உறுதியான மற்றும் வலுவான வடிவமைப்பு, பயோ டாய்லெட்டுகள், அதிக இருக்கை வசதி, பெரிய பரந்த ஜன்னல்கள், ஏசி பெட்டிகளில் எஃப்ஆர்பி (ஃபைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்) பேனல்கள், மைக்ரோபிராசசர் கண்ட்ரோல்ட் ஏசி போன்றவை எல்.எச்.பி பெட்டிகளின் முக்கிய அம்சங்களாகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
(Release ID: 2001902)
ANU/SMB/PKV/KPG/KRS
(रिलीज़ आईडी: 2002019)
आगंतुक पटल : 125