சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இதரப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை

Posted On: 20 DEC 2023 3:05PM by PIB Chennai

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான அரசின் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் நோக்கம், தரமான உயர்கல்வியைப் பெறுவதற்கு நிதி உதவி வழங்குவதன் மூலம் ஓபிசி மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு அளிப்பதாகும். பின்வரும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற எம்.பில் / பி.எச்.டி பட்டங்களுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆண்டுக்கு மொத்தம் 1000 இளநிலை ஆராய்ச்சி கல்வி உதவித்தொகைகளை வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது:

தேசிய தகுதித் தேர்வு - யுஜிசியின் இளநிலை ஆராய்ச்சி கல்வி உதவித்தொகை (நெட்-ஜேஆர்எஃப்) (மனிதநேயம் / சமூக அறிவியல்) அல்லது

ii. யுஜிசி-அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (யுஜிசி-சிஎஸ்ஐஆர்) நெட்-ஜேஆர்எஃப் கூட்டுத் தேர்வு (அறிவியலுக்காக)

2018-19-ம் ஆண்டில் 324 இளநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு  10 கோடியே 29   லட்சம் ரூபாயும், 2019-20-ம் ஆண்டில் 810 இளநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு 40 கோடியே 92 லட்சம் ரூபாயும், 2020-21-ம் ஆண்டில் 772 இளநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு 25 கோடியே 59 லட்சம் ரூபாயும், 2021-2022-ம் ஆண்டில் 831 இளநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு 34 கோடியே 74 லட்சம் ரூபாயும், 2022-23-ம் ஆண்டில் 1070 இளநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு 34 கோடியே 90 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

ஜே.ஆர்.எஃப் (இளநிலை ஆராய்ச்சி கல்வி உதவித்தொகை): - 2 ஆண்டுகளுக்கு ரூ .31,000 /- முதல் 2 ஆண்டுகளுக்கு ரூ .37,000 /- வரை

எஸ்.ஆர்.எஃப் (முதுநிலை ஆராய்ச்சி கல்வித்தொகை): - மீதமுள்ள காலத்திற்கு ரூ .35,000 /- முதல் மீதமுள்ள காலத்திற்கு ரூ .42,000 /- வரை.

இத்தகவலை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்   பிரதிமா பவுமிக் இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

***

(Release ID: 1988625)

ANU/PKV/AG/IR/KRS


(Release ID: 1988869)
Read this release in: English , Urdu , Hindi