தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை தொடங்கி ஒரு மாதம் நிறைவு: தீவிரமான செயல்பாடுகள்


பயன் அடைந்தவர்கள் தொடர்பான எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது- ஆனால் புள்ளிவிவரங்களை விட மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன் அடைந்துள்ளனர்

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரைப் பயனாளிகளுடன் பிரதமர் இன்று மூன்றாவது முறையாகக் கலந்துரையாடுகிறார்

Posted On: 16 DEC 2023 2:54PM by PIB Chennai

இந்தியா முழுவதும், சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. நம்பிக்கையின் அம்சமான நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை, பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியை அனைத்து இந்தியர்களின் வீடுகளுக்கும் கொண்டு வருகிறது.

 

ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023  நவம்பர் 15-ம் தேதி இந்த யாத்திரையைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், திட்டங்கள் முழுமையாக அவர்களைச் சென்றடைவதையும் இந்த யாத்திரை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2024 ஜனவரி 25-க்குள் நாடு முழுவதும் உள்ள 2.60 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 4000 க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சென்றடையும்.

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் இன்று (16-12-2023) கலந்துரையாடுகிறார். இந்த யாத்திரை தொடங்கிய பின் பிரதமர் மேற்கொள்ளும் மூன்றாவது உரையாடல் இதுவாகும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையைப் பிரதமர் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

இந்த யாத்திரை ஒரு மாத குறுகிய காலத்தில், நாட்டில் உள்ள 68,000 கிராம பஞ்சாயத்துகளில் 2.50 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது. கிட்டத்தட்ட 2 கோடி தனிநபர்கள் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான உறுதி மொழி ஏற்றுள்ளனர். மேலும் மத்திய அரசு திட்டங்களின் 2 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை ஒரு வாக்குறுதி மட்டுமல்ல. உறுதியான செயல்பாடுகளுடன் அமைக்கப்பட்ட ஒரு பயணம். இதன் சில சாதனைகள் - (2023 டிசம்பர் 16, பிற்பகல் 1:00 மணி நிலவரப்படி):

•    யாத்திரை சென்றடைந்த கிராம ஊராட்சிகள் - 68,267

•    யாத்திரை சென்றடைந்த நகர்ப்புறங்கள் - 1,737

•    கலந்து கொண்ட மக்கள் - 2,54,81,761

•    அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பயனாளிகள் - 2,05,31,050

•    வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான உறுதி மொழி ஏற்ற மக்கள் -1,96,46,326

 

யாத்திரையின் போது வழங்கப்பட்ட சேவைகள் (2023 டிசம்பர் 16, பிற்பகல் 1:00 மணி நிலவரப்படி):

•    சுகாதார முகாம்களில் மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை - 51,34,322

•    ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்பட்டது - 10,18,367

•    மக்களுக்கு அரிவாள் செல் பரிசோதனை - 7,66,287

•    காசநோய் (காசநோய்) பரிசோதனை செய்யப்பட்டவர்கள் - 35,14,793

•    மை பாரத் தன்னார்வலர் பதிவு - 7,61,202

•    பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டப் பதிவு - 3,26,580

•    பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா பதிவு - 3,67,850

•    பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா பதிவு - 6,52,985

•    பிரதமரின் ஸ்வநிதி முகாமை பார்வையிட்ட மக்கள் - 1,95,734

•    ட்ரோன் செயல்விளக்கங்கள் - 29,372

•    மண்வள அட்டை செயல்விளக்கம் - 35,455

100 சதவீதம் திட்டப் பயன்கள் சென்றடைந்தது எண்ணிக்கை

(2023 டிசம்பர் 16 பிற்பகல் 01:00 மணி நிலவரப்படி) - கீழ்க்கண்ட திட்டங்களில் கீழ்க்கண்ட எண்ணிகையிலான கிராமங்கள் 100 சதவீத பயன்களைப் பெற்றுள்ளன:

•    ஆயுஷ்மான் அட்டை - 33,713 கிராமங்கள்

•    அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு -  24,925 கிராமங்கள்

•    100 சதவீதம் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல் - 39,504 கிராமங்கள்

•    திறந்த வெளிக் கழிப்பிடங்கள் அற்ற பிளஸ் மாதிரி கிராமங்கள் - 11,565

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் ஊக்கமளிக்கும் தகவல்களை https://viksitbharatsankalp.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்,

*******


ANU/PKV/PLM/DL



(Release ID: 1987156) Visitor Counter : 180