சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர்களின் 18-வது தேசிய ஆய்வுக் கூட்டம் 2023 நவம்பர் 29,30 தேதிகளில் நடைபெறவுள்ளது

Posted On: 28 NOV 2023 5:18PM by PIB Chennai

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016-ஐ செயல்படுத்துவது குறித்து விவாதிக்க, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர்களின் 18-வது தேசிய ஆய்வுக் கூட்டத்தை புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2023 நவம்பர் 29 முதல் 30வரை  நடத்துவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர்கள் கலந்து கொண்டு, 'மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016'ஐ நாட்டின் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் திறம்பட செயல்படுத்துவதற்கான புதிய உத்திகள் குறித்து விவாதிப்பார்கள்.

இக்கூட்டத்தில், மாநில ஆணையர்கள், அந்தந்த மாநிலங்களில் ஊரக வளர்ச்சித் திட்டச் சட்டம், 2016-ஐ செயல்படுத்தும் நிலை குறித்தும், இச்சட்டத்தை செயல்படுத்துவதில் அவர்களின் குறிப்பிட்ட சாதனைகள் குறித்தும் விளக்கமளிக்க உள்ளனர்.  மேலும், ஊரக வளர்ச்சி முகமை சட்டம்-2016-ஐ திறம்படச் செயல்படுத்துவதற்கான நல்ல நடைமுறைகள், சாதனைகள் மற்றும் புதிய உத்திகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் செயலாளரும், தலைமை ஆணையருமான திரு ராஜேஷ் அகர்வால் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, தொடக்க நாளில் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றுவார்.

தொடக்க அமர்வின் போது, மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் (மாற்றுத் திறனாளிகள்) மற்றும் மாநிலங்களின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர்கள் பிறப்பித்த பல்வேறு முக்கிய உத்தரவுகளின் தொகுப்பும் வெளியிடப்படும்.

 

***

ANU/PKV/IR/AG/KPG



(Release ID: 1980493) Visitor Counter : 69


Read this release in: English , Urdu , Hindi