வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் தளவாட செயல்திறன் குறியீட்டெண் (எல்பிஐ) தரவரிசையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டம் குறித்து 11 தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் ஆலோசனை நடத்தின

Posted On: 18 NOV 2023 5:46PM by PIB Chennai

இந்தியாவின் தளவாட செயல்திறன் குறியீட்டெண் தரவரிசையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டம் குறித்த கூட்டம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் தலைமையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொடர்புடைய பதினொரு  அமைச்சகங்கள், துறைகளில் அமைக்கப்பட்டுள்ள தளவாட செயல்திறன் குறியீட்டெண் பிரத்யேக பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

(i) சுங்கம்,(ii) உள்கட்டமைப்பு (iii) ஏற்றுமதிகளை எளிதாக்குதல் (iv) தளவாட சேவைகளின் தரம் (v) கண்காணிப்பு மற்றும் தடமறிதல் மற்றும் (vi) நேரமின்மை உள்ளிட்ட தளவாட செயல்திறன் குறியீட்டெண்ணில் ஆறு அளவுருக்களில் செயல்திறனை மேம்படுத்துவதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விளைவுகளை மதிப்பிடுவதற்காக ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் பிரத்யேக பிரிவு கூடுகிறது.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை சிறப்பு செயலாளர் திருமதி சுமிதா தாவ்ரா தனது தொடக்க உரையில், நாட்டின் தளவாட செயல்திறனை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் உலக வங்கி எல்.பி.ஐ.யில் இந்தியாவின் தரவரிசையை மேம்படுத்துவதற்கும் இலக்கு செயல் திட்டம் முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார். தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் எடுத்த நடவடிக்கைகள் உலக வங்கி எல்பிஐ குழுவுக்கு காண்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், அமைச்சகங்கள், துறைகளின் செயல்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சிறந்த நடைமுறைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்திய நிலத் துறைமுகங்கள் ஆணையத்தின் செயலாளர் திரு விவேக் வர்மா, ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளில் தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் இடையில் தகவல்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், பாதுகாப்பான மின்னணு பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும் எல்.பி.ஏ.ஐ நில துறைமுக மேலாண்மை முறையை செயல்படுத்தியுள்ளது என்பதை எடுத்துரைத்தார்.

இந்த அமைப்பு எல்லை தாண்டிய இயக்கங்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கிறது, சுங்கம் மற்றும் எல்லை மேலாண்மை அனுமதியின் செயல்திறனை மேம்படுத்துகிறது, மேலும் ஏற்றுமதிகளை சரியான நேரத்தில் வழங்குவதை மேம்படுத்துகிறது.  எல்.பி.ஏ.ஐ , காத்திருப்பு  நேரத்தை 57 நாட்களில் இருந்து 24 மணி நேரத்திற்கும் குறைவாக குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

ரயில்வே அமைச்சகத்தின் அமலாக்கத் துறையின் திரு மனோஜ் கங்கேயா, எல்பிஐயின் ஆறு அளவுருக்களில் எம்ஓஆர் திட்டமிட்டுள்ள பல்வேறு முன்முயற்சிகளைப் பற்றி கூறினார்.

இந்திய நிலத் துறைமுகங்கள் ஆணையம், சிவில் விமானப் போக்குவரத்து, ரயில்வே, துறைமுக கப்பல் மற்றும் நீர்வழிகள், நிலக்கரி, சிவில் விமானப் போக்குவரத்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், எஃகு,  மற்றும்  வர்த்தக துறைகள், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ,தேசிய தொழில்துறை சாலை மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட பதினொரு தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.

*****

ANU/AD/BS//DL



(Release ID: 1977883) Visitor Counter : 73


Read this release in: English , Urdu , Hindi , Telugu